முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

உபயோகிக்கும் பொருள் சேதமானால் உடனே புதிய பொருள் வாங்க வேண்டுமா?

மினிமலிசம் என்றால் தமிழில் எளிமையம் என செல்லலாம் நம் தாத்தா,பாட்டி முன்னோர்கள் எப்படி அத்தியாவசத்தோடு மட்டும் வாழ்ந்தார்களோ அதுதான் மினிமலிசம்.. சிம்பிளா சொல்லனும்மா குறைவான /தேவையான பொருட்களுடன் மனநிறைவாக மகிழ்வாக வாழ்வது, சிக்கனத்திற்கும் மினிமலிசத்தித்திக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. நான் இரண்டு சிம் கார்டு போடும் ஒரு ஸ்மார்ட் போன் தான் உபயோகிக்கிறேன் அதனுடைய கவர்/கவசம் கிழிந்துவிட்டதென வாங்கணும் வாங்கணும் வாங்கணும்னு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன் ஒரு நாள் கை நழுவி மொபைல் திரை உடைந்து விட ஒரு பக்கம் டச் வேலை செய்யவில்லை அப்போது தான் தோன்றியது காலம் தாழ்த்திருக்காமல் ஒரு கவர் போட்டு இருக்கலாம் என. ஷோரூமில் சென்று திரை மாற்ற எவ்வளவு ஆகும் என கேட்டால் 2000 ரூபாய்க்கு மேல் ஆகும் என கூறினார்கள். சரி என்ன செய்யலாம்னு யோசிச்சேன். சிலரிடம் ஆலோசனை கேட்டேன் மூணாயிரம் கொடுத்து திரை மாற்றுவதற்கு பதில் நீ வேற மொபைல் வாங்கிடுனு சொல்ல எனக்கு இந்த மொபைல் மாற்ற மனமும் இல்லை கையில் பணமும் இல்லை😂.. கால் பேசமுடியுது, செல்பி எடுக்க முடியுது, வாட்சப்,மூஞ்சி புக்னு எல்லாம் வருது, 64 ஜிபி மெமரி கார்டு போட்டாச்சு என்ன ஒன்னு ஒரு சிம் போட்டால் 1 மெமரி கார்டு தான் போட முடியும் அது மட்டும்தான் குறை, மற்றவையெல்லாம் பக்கா👌.. ஒரு 2 மாதம் எப்படியோ ஓட்டி பணம் ஈட்டி திரை மாற்றிய உடன் tempered glass, flip cover போட்டாச்சு இப்போ அருமையா இருக்கு என் செல்லம். இதுக்கு 10,000 கொடுத்து மொபைல் வாங்கி அதுக்கு துணிமணிகள் எல்லாம் வாங்கி மாட்ட எப்படியோ ஒரு 11 ஆயிரம் ஆகிடும் வேண்டாமே எனக்கு இதுவே பிடித்திருக்கிறது, "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" அதுக்காக பெரிதாக ஆசைப்படக்கூடாதுனு இல்லை,ஆடம்பரமாக இல்லாமல் அத்தியவசத்தோடு வாழ்ந்தால் பணமும் மிச்சம் மனதிற்கும் மகிழ்ச்சி...! மினிமலிசம் பற்றி மேலும் தமிழில் அறிய இந்த பக்கத்தை பின்தொடறவும் https://www.facebook.com/debtfreetamil/ வாழ்க்கைக்கு பணம் அவசியம்!!! அதை சேமிக்க நம் மனம் அத்தியாவசியம்!!! நன்றி #Minimalism #MinimalismTamil #Debtfree #Savings #Investment #FinicialFreedom #Rich

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...