முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...

சாலையை கடப்பவர்களுக்கு விபத்து நடப்பது எப்படி? யாருக்கு பாதிப்பு? எப்படி தவிர்க்கலாம்!! | சாலை விபத்து

காலை வேலைக்கு செல்லும்வழியில் சிக்னல் இல்லாத இடத்தில் இரு பெண்கள் (இளைஞ்சிகள்)  சாலையை கடக்க குடுகுடுவென ஓடியிருக்கிறார்கள்.சிக்னல் பச்சை விழுந்தவுடன் வண்டியெல்லாம் பறக்கும்(பறக்க தானே வேண்டும்) அவரவர்க்கு அவரவர் வேலை. இரு பெண்களையும் மோதியுள்ளார்,மோதிவிட்டு ஓடவில்லை அங்கேயே தான் இருந்தார் எனக்கு தெரிந்து அவர்மேல் தவறில்லை, திடீரென வண்டியை மெதுவாக்கி நிறுத்துவது கடினமான செயல் தான்!! இடத்த இடியில்  ஒருவருக்கு கால்,முட்டி கையெல்லாம் அடி, இன்னொரு சகோதரிக்கு கை, கால்,நெற்றி, கண்ணத்திலிருந்து ரத்தம் வந்துகொண்டே இருந்தது,எல்லாம் தண்ணீர் கொடுத்து கொண்டு,ஆம்புலன்ஸிற்கு கால் செய்து கொண்டிருந்தார்கள்,அங்கு வந்த அக்காவிடம் ஒரு துணியை வாங்கி நெற்றியில் மெல்ல கட்டி விட்டோம். ஆம்புலன்ஸ் வர ஏற்றி அனுப்பினோம்.இடித்த நண்பருக்கு இன்று செமஸ்டர் தேர்வு நீங்கள் கிளம்புங்க என சொன்னால் எப்படி ஜி போறது. வண்டியை  திருப்ப முடியவில்லை,சாவி வேறு எடுத்துவிட்டார்கள் அடுத்து போலீஸ் வண்டியை தள்ளி சென்று அவரை கொண்டு கூட்டி சென்றனர் என்னாச்சோ தெரியவில்லை,வழியில் கோவிலில் நின்று கும்பிட்டு சென்...