முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மிடில் கிளாஸ் சாமானியனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா?

இந்த மிடில் கிளாஸ்,ஹை கிளாஸ்,லோ கிளாஸ் எல்லாமே இச்சமுதாயம் உருவாக்கியது தான் ,அதுவும் பணத்தின் அடிப்படையில் மட்டும் இவை கணக்கிடப்பட்டு இவர்கள் லோ கிளாஸ்,இவர்கள் ஹை க்ளாஸ் என பெரும் பட்டத்தை கொடுக்கிறது இச்சமூகம்.சமூகம் கொடுக்கிறதோ இல்லையோ நாமே நம்மை இப்படி அழைத்துக்கொள்வோம். என்ன வாழ்க்கை டா இது!!!! ஒன்னு பணக்காரராக இருந்திடனும்,இல்ல லோ கிளாஸ்ஸா இருந்திடனும் ,இப்படி மிடில் கிளாசில் பிறந்து ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோமே,ச்சே என்ன வாழ்க்கை டா இது....! ஆசைப்பட்ட பொருளையோ,உணவையோ நினைத்தவுடன் வாங்க முடியாது, வாடகை வீடு,வாங்கிய பொருளுக்கு மாதாமாதம் EMI, குடும்ப கடன்கள்,நெருக்கமானவர்களுக்கு ஒரு பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல்,சம்பாதித்த பணம் எல்லாம் கடனுக்கும்,வீட்டிற்கும் போக ஆசைப்பட்ட இடத்திற்கு போகவோ,வேண்டியதை வாங்கவோ பணம் இல்லாமல் அம்மாதத்தை ஓட்டுவது,சரியான உடை கூட அணிய முடியாத அளவிற்கு வறுமை,நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே,வாழ்க்கைல எப்படியாச்சும் மேல வந்துடனும்,நம்ம தூற்றியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டணும் ,வேற லெவல் வாழனும்னு வெளியில் கம்பீரமாக சற்றுக் கொண்டும் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டும் தான் ஒவ்வொரு மத்திய வர்க்கத்தினரும் புலம்பிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.. உள்ளுக்குள் பல இலக்குகளையும், கனவுகளையும் வைத்துக்கொண்டு வேலையிலும் ஈடுபாடில்லாமல்,தன் இலக்கிலும் கவனம் செலுத்த முடியாமல் உள்ளுக்குள் நொந்து,வெந்து மனஅழுத்ததோடு வெளியில் "நான் நல்லா இருக்கேன்" எனக்கென்னனு அனைத்து துன்பத்தையும் இன்பமாக காட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறான் ஒவ்வொரு சாமானியனும்.. மற்றவர்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அவர்களை புரிந்துகொள்ளுதல்,அவர்களை அவர்கள் போக்கில் விட்டாலே வாழ்வில் உயர்ந்து விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் இலக்கையும்,வேலையையும் பாலன்ஸ் செய்யுங்கள், எந்நிலையில் சோர்ந்தாலும் அடுத்த கணமே புத்துணர்ச்சி பெற்று வேலையில் ஈடுபடுங்கள்,தொடர்ந்து முயலுங்கள்,சுயமுற்ற புத்தங்கங்கள், நேர்மறை வார்த்தைகள்,கதைகளை படியுங்கள்,அதிகாலை எழ முயற்சி செய்யுங்கள்,உங்கள் துறையில் அப்டேட் ஆகிக்கொண்டே இருங்கள்,நிதி மேலாண்மை பற்றி அறிந்துகொள்ளுங்கள்,அனைத்திற்கும் மேல் முக்கியமான ஒன்று.. எண்ணம் ,ஆம் நம் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் நம் வாழ்க்கை,எண்ணத்தை தூய்மையாக தெளிவாக உங்கள் இலக்கின் மேல் வையுங்கள், எண்ணம் வலுவாக இருந்தால் நீங்கள் நினைக்கும் அனைத்தும் நடக்கும், இது தான் ஈர்ப்பு விதி ஈர்ப்பு விதி பற்றி அறிய ரகசியம் எனும் புத்தகத்தை வாசியுங்கள் இல்லையெனில் கீழே யூ டியூப் சுட்டியை கொடுக்கிறேன் பாருங்கள் https://youtu.be/RnzVYqotphw சுயபிரகடனம் "நான் நன்றாக இருக்கிறேன்,என் இலக்கை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்,நான் நினைத்தது அனைத்தும் நடக்கும்,என் குடும்பம்,என் வேலை சிறப்பாக இருக்கிறது" மற்றவருடன் பேசுவதை விட உங்களுடன் நீங்கள் பேசுவது உங்களை அறிய உதவும்,இது அவசியமும் கூட... "ஆமா,சவாலான காரியம் தான்,வேற வழி இல்ல ,நம்மை,நம் குடும்பத்தை,இவ்வுலகை நாம் தான் மாற்ற வேண்டும், முடியும் உன்னால் முடியும்....! எண்ணம் போல் வாழ்க்கை!! பயணிப்போம்..! #tamilblogger #blogger #middleclass #middleclasslife #life #goals #feelings #challenge #lifechallenge #success #secret #lawofattraction #thoughtsbecomethings #affirmation

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...