முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

love லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது | உயிராக இருந்தாலும் ,பொருளாக இருந்தாலும்!!!!

சில விடயங்கள் போனால் வராது,பொழுது போனால் கிடைக்காது!! அது ஒரு உறவாக,பொருளாக இருக்கலாம். பொருள் என்றால் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும்,அதை சரியாக சேவை(service) செய்யாமல் உபயோகப்படுத்திக்கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யும் அடுத்து வேலை செய்யாது அல்லது கவனமாக வைத்திருக்காமல் எங்காவது தவற விட்டுக்குடிப்போம்.  அடுத்து என்ன செய்வோம் "இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்,சோம்பேறித்தனம் பார்க்காமல் ஒழுங்கா சர்வீஸ் செய்திருக்கலாம்" என அழுது, புலம்ப வேண்டியது. ஒரு பொருளுக்கே இப்படினா நமக்கு பிடித்த,நம்மை பிடித்த,நமக்காக வாழும் உயிரை நாம் எப்படி அன்பை பகிர வேண்டும்,பார்த்துக்கொள்ள வேண்டும்,அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என உணர்த்த/உணர வேண்டும்.சின்ன சண்டை தான்  யார் மன்னிப்பு கேட்பது என தொடங்கி பெரிய விரிசலாகி விடும். அதோடு வாழ்வில் அதே உறவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.   ஒரு சின்ன சாரி தான் அதை கேட்பதற்கு நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு தான் கேட்க வேண்டும்...

மறைந்த பின்பு அழுவதை விட வாழும்போது நேசியுங்கள் !!!

இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3  2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று  பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள். நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான். சில  சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வ...

வாழ்வின் மிகப்பெரும் வலு நெருக்கமாமவரும் இழப்பு,அதுவும் தான் பெற்ற பிள்ளைகளில் மரணம்? இதை கடக்க என்ன செய்யலாம்?

வாழ்வில் மிகப்பெரிய வலி என்றால் அது மரணம் மட்டுமே. நம் வாழ்வில் ஏராளமான  மரணத்தை கண்டிருப்போம்,ஆனால் அது வெறும் மரணச் செய்தியாகவே வந்து சில மாதங்களில் மறந்துவிடும்.நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று.அது பிரிந்தாலும் சரி இறந்தாலும் சரி. தாய்,தந்தை இழப்பை கூட மகனோ மகளோ தாங்கி அவர்கள் நினைவில் வாழ்ந்து கடந்து விடுகின்றனர்.ஏனெனில் அவர்களுக்கு குடும்பம்,குட்டி என வந்துவிடுவதால் அப்படியே வாழ்க்கை சென்று விடுகிறது. ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தையின் (என்ன வயதானாலும் குழந்தை தானே) மரணத்தை பார்ப்பது வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.அந்த வலியை அம்மாவும்,அப்பாவும் வாழ்க்கை முழுக்க சுமப்பார்கள்.மிகவும் கொடுமையானது.வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் உணர்வார்கள். தன் மகன்/ள் உடல் முன்பு அவர்கள் கதறும் கடைசி மரண ஒளங்கள் கேட்க  முடியாது.இருக்கின்ற மொத்த வலியும் கண்ணில் கண்ணீராக தெரியும்.இதுவரை நிகழ்ந்த,அவர்கள் குணங்களை ல்,பிடித்த உணவுகளை நண்பர்களை பற்றியெல்லாம் கூறி எழுந்து வாடா செல்லமே என அழுகும் போது ஆத்மா மொத்தமும் கதறும். என் வாழ்வில் தன் மகனை/மகளை இழந்து தினம்...

காதல் என்றால்?காதல் முறிவு எப்படி ஆகிறது?Break Up-ன் வலி?கடந்து செல்ல முடியுமா?

காதல் தோற்றுப் போவதில்லை!! காதலர்கள்  தான் தோற்றுப் போகிறார்கள்!!♥️ இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பல துன்ப செய்திகள் கேட்டாலும் பல காதல் முறிவு செய்திகளையும் கேட்கவும்,பார்க்கவும் முடிகிறது. காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவின் வலியும் வேதனையும்,பார்வையாளராக எளிதில் கடந்து செல்ல முடியும்,ஏளனமாக சிரிக்கவோ ,கேலி செய்யவோ கூட முடியும்,ஏன் ஆறுதல் கூட சொல்ல முடியும் ஆனால் வலியை உணர்வது கடினம், அவ்வுணர்வில் இருந்து நகர்வது நரகம். சில ஆய்வுகளின் படி கண்டவுடன் காதல் எல்லாம்  முக்கால் வாசி பிரிவில் தான் முடிந்தள்ளது.பேசி,பழகி,புரிந்து உணர்ந்த காதல் மட்டுமே நிலைத்து நின்றதாக கூறுகிறது. இப்போது காதல் செய்வது எல்லாம் ட்ரெண்ட் ஆகி விட்டதல்லவா?அதை செய்யவில்லையென்றால் என்னவோ மாதிரி பார்கிறார்களே. காதல் எவ்வயதிலும் வரும் ஆனால் அது காதல் தானா என்பது தான் இங்கு கேள்வியே? நாள் முழுக்க கடலை,ஊர் சுற்றுவது,நிறைய பரிசுகள் இது மட்டுமல்ல காதல்.உள்ளத்தால் இணைந்து   உணர்வோடு கலந்து வாழ வேண்டும்.காதலில் புரிதலும் ,விட்டுக்கொடுத்தலும் முக்கியமான ஒன்று. முறிவின் தொடக்கமே இது தான் ...

2k கிட்ஸ் குட்டி வடிவேலு,சோபி கதை என்ன? ஏன் ட்ரெண்ட் ஆனது ?இதை கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்?

சமீபத்தில் ட்ரெண்டில் இருக்கும் குட்டி வடிவேலு எனும் சஞ்சய்♥️சோபியை  ஓட்டாத ஆளே இல்லை. வாட்சப்,முகப்புத்தகம், யூ ட்யூப்னு எங்கு பார்த்தாலும் ட்ரோல்ஸ் தான் அவர்களின் எண்ணமும் ட்ரெண்டிங் ஆவது தான், அவர்கள் மட்டுமல்ல  ரீல்ஸ்,டிக் டாக் செய்பவர்கள் அனைவருக்கும் தான் ட்ரெண்ட்ஆக வேண்டும் என்பது  தானே விருப்பம்,அனைவருக்கும் தன்னை பலருக்கும் தெரிய வேண்டும்,பாராட்ட வேண்டும் என்பது தானே ஆசையும் கூட. மற்றவர்கள்  போல் இவ்விடயத்தை சிரித்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை, ஒரு விதமான கோபவும்,கேள்விகளும் எழுகிறது! என் பார்வை சரியானதா என தெரியவில்லை,அதுமட்டுமில்லாமல் முக்கால்வாசி பேருக்கு எதிரான,முரணான கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 17 வயது சிறுவன் 2k கிட் சஞ்சய்,சோபி  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி பேசி வந்து தன் காதலை அப்பெண்ணிடம் சோபியிடம் வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கும் பிடித்து போகவே ஓகேசொல்லியுள்ளார். பெற்றோர்களிடம் இதை தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இக்கால பெற்றோர் என்பதால் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன். சஞ...