சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
காதல் தோற்றுப் போவதில்லை!!
காதலர்கள் தான் தோற்றுப் போகிறார்கள்!!♥️
இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பல துன்ப செய்திகள் கேட்டாலும் பல காதல் முறிவு செய்திகளையும் கேட்கவும்,பார்க்கவும் முடிகிறது.
காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவின் வலியும் வேதனையும்,பார்வையாளராக எளிதில் கடந்து செல்ல முடியும்,ஏளனமாக சிரிக்கவோ ,கேலி செய்யவோ கூட முடியும்,ஏன் ஆறுதல் கூட சொல்ல முடியும் ஆனால் வலியை உணர்வது கடினம், அவ்வுணர்வில் இருந்து நகர்வது நரகம்.
சில ஆய்வுகளின் படி கண்டவுடன் காதல் எல்லாம் முக்கால் வாசி பிரிவில் தான் முடிந்தள்ளது.பேசி,பழகி,புரிந்து உணர்ந்த காதல் மட்டுமே நிலைத்து நின்றதாக கூறுகிறது.
இப்போது காதல் செய்வது எல்லாம் ட்ரெண்ட் ஆகி விட்டதல்லவா?அதை செய்யவில்லையென்றால் என்னவோ மாதிரி பார்கிறார்களே.
காதல் எவ்வயதிலும் வரும் ஆனால் அது காதல் தானா என்பது தான் இங்கு கேள்வியே?
நாள் முழுக்க கடலை,ஊர் சுற்றுவது,நிறைய பரிசுகள் இது மட்டுமல்ல காதல்.உள்ளத்தால் இணைந்து உணர்வோடு கலந்து வாழ வேண்டும்.காதலில் புரிதலும் ,விட்டுக்கொடுத்தலும் முக்கியமான ஒன்று.
முறிவின் தொடக்கமே இது தான் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாது போகப்போக வாழ்க்கை பற்றிய கேள்விகள் அதிகம் வரும்போது தான் பல குழப்பங்களும் வரும்,
"இவன்/இவள் நல்லா பார்த்துக் கொள்வார்களா?"
"இவர்/ள் நமக்கு செட் ஆகுமா?"
"நாம் நினைத்த வாழக்கையை இவர்களால் கொடுக்க முடியுமா?"
இப்படி லாங் டேர்ம்மாக யோசிப்பதால் பல குழுப்பங்கள் சேர்ந்து சரி வேறு வழி இல்லை என இது வேண்டாம் என முடிவு எடுக்கிறார்கள்.
சிலரோ என்ன ஆனாலும் சரி என் முடிவு சரி இவங்க தான் நமக்கு சரியான ஆளுனு நிற்பார்கள்.
காதல் முறிவு எப்போது ஆகிறதோ அன்னோடி முதல் அழுகை,நினைவுகள்,அவர்களின் குரல், நேரில் அருகில் இருப்பது போன்ற உணர்வு, என்னென்னவோ கற்பனைகள்,தற்கொலை எண்ணம், சாட்ஸ் படித்து அழுவது,இருவருக்கும் பிடித்த பாடல்கள் கேட்பது, மது,தனிமை,லாஸ்ட் ஸீன் பார்ப்பது ,கெஞ்சுவது,புலம்பல்,எப்படியாவது நம்மிடம் வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கம்!!!
ஒவ்வொரு நிமிடமும் கடப்பதே பெரும் நரகமாக இருக்கும்,அதுவும் இரவை கடப்பதெல்லாம் பெரும் கொடுமை,அந்நேரத்தில் பேசிய வார்த்தைகள்,ஒன்றாக இருந்த மணித்துளிகள் எல்லாம் வாட்டி வதைக்கும், மொத்தத்தில் நடைப்பினமாகவே வாழ்வார்கள்.
வெளியே யாருக்கும் காட்டிக்கொள்ள மாட்டார்கள் ,சிரிப்பால் கடந்து செல்வார்கள்,அந்த சிரிப்பிற்குள் ஏராளமான கண்ணீரும், வலியும் அடங்கி இருக்கும்.
அதிலிருந்து கடந்தது வர எவ்வளவோ முயற்சித்தும் மனம் கடந்து செல்ல மறுக்கிறது,இதை நினைத்து நான் வாடுவதையே மனம் விரும்புகிறது போலும்.
இதில் இருந்து வெளியே வர பலவற்றை முயற்சிக்கிறார்கள்,பலவற்றில் ஆர்வம் செலுத்துகிறார்கள் கொஞ்சம் பரவியில்லை என்றால் முழுவதுமாக விடுபட முடியவில்லையே.
எப்படி முடியும் ஆழ் மனதில் பதிந்த ஒன்று அவ்வளவு எளிதில் மறக்குமா என்ன? எப்படியாவது நம்மிடம் வந்துவிட மாட்டார்களா என ஏக்கத்தில் வாழ்பவர்கள் ஏராளம்.
இல்லை,ஆனது ஆகிவிட்டது இதுதான் நிதர்சனம் வாழக்கை எந்த பாதையில் கூட்டி செல்கிறதோ அதில் செல்வோம் என சென்றவர்களும் ஏராளம்.
காதல் எக்காலத்திலும் முறிவதில்லை,காதலர்கள் தான் முறிகிறார்கள்!
இதுவும் கடந்து போகும்!!
மாற்றங்களே விடை♥️
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️