முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

savings லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...

இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

உயிர் வாழ மூச்சுக் காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம் . இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும்  காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை. பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க. இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம். சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்". யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது". அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 ம...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...

உபயோகிக்கும் பொருள் சேதமானால் உடனே புதிய பொருள் வாங்க வேண்டுமா?

மினிமலிசம் என்றால் தமிழில் எளிமையம் என செல்லலாம் நம் தாத்தா,பாட்டி முன்னோர்கள் எப்படி அத்தியாவசத்தோடு மட்டும் வாழ்ந்தார்களோ அதுதான் மினிமலிசம்.. சிம்பிளா சொல்லனும்மா குறைவான /தேவையான பொருட்களுடன் மனநிறைவாக மகிழ்வாக வாழ்வது, சிக்கனத்திற்கும் மினிமலிசத்தித்திக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. நான் இரண்டு சிம் கார்டு போடும் ஒரு ஸ்மார்ட் போன் தான் உபயோகிக்கிறேன் அதனுடைய கவர்/கவசம் கிழிந்துவிட்டதென வாங்கணும் வாங்கணும் வாங்கணும்னு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன் ஒரு நாள் கை நழுவி மொபைல் திரை உடைந்து விட ஒரு பக்கம் டச் வேலை செய்யவில்லை அப்போது தான் தோன்றியது காலம் தாழ்த்திருக்காமல் ஒரு கவர் போட்டு இருக்கலாம் என. ஷோரூமில் சென்று திரை மாற்ற எவ்வளவு ஆகும் என கேட்டால் 2000 ரூபாய்க்கு மேல் ஆகும் என கூறினார்கள். சரி என்ன செய்யலாம்னு யோசிச்சேன். சிலரிடம் ஆலோசனை கேட்டேன் மூணாயிரம் கொடுத்து திரை மாற்றுவதற்கு பதில் நீ வேற மொபைல் வாங்கிடுனு சொல்ல எனக்கு இந்த மொபைல் மாற்ற மனமும் இல்லை கையில் பணமும் இல்லை😂.. கால் பேசமுடியுது, செல்பி எடுக்க முடியுது, வாட்சப்,மூஞ்சி புக்னு எல்லாம் வருது, 64 ஜிபி ம...

சம்பளம் வந்த உடனே பணம் பறந்து விடுகிறதா?

பலரைப் பார்த்துள்ளேன் ஐந்து டிஜிட்டில் சம்பாதிக்கும் நபர்கள் சம்பளம் வந்த 10 முதல் 15 தேதிக்குள் பூஜ்ஜியத்தில் நிற்பார்கள், அவ்வளவு ஏன்?  5 தேதிக்குள் மொத்த பைசாவும் பறந்து மாதம் முழுக்க பத்து பைசாவுக்கு சிங்கி அடிக்க நேரிடும். எப்படா 1 ஆம் தேதி வரும், சம்பளம்  வரும்னு அதை நோக்கியே நம் பயணம் இருக்கும், திரும்ப அதே ஓட்டம் தான் வாழ்க்கை முழுக்க. ஆம்,சம்பளம் வந்த உடனே நம் சுய செலவுக்கோ,சேமிப்பிற்கோ ஒரு துளியேனும் எடுத்த வைக்க வில்லையெனில், வீட்டு வாடகை,EMI,மல்லிகை சாமான்,மருத்துவ செலவு,வீட்டு செலவு,வீட்டிற்கு பணம் கொடுப்பது என வெய்யிலில் கரையும் ஐஸ் கட்டியைப் போல் இருந்த இடமே தெரியாமல் உருகி விடும்.. Pay yourself first  என சொல்வார்கள்,அதாவது சம்பளம் வந்த  பிறகு நம் சேமிப்பிற்கோ,முதலீட்டிற்கோ ஒரு சிறு பகுதி ஒதுக்கி விட வேண்டும்,பின் மீதம் இருக்கும் பணத்தை வைத்து நம் அன்றாட வாழ்வை ஓட்ட முடியும்,ஏனெனில்  ஒதுக்கி வைத்த பணத்தை ஒதுக்கியதே நினைவில் இருக்காது,இது பழகியும் போகும்... எவ்வளவு செலவுகள்,கடன்கள் இருந்தாலும் இதை செய்வது தான் சரியென வல்லுனர்கள்  சொல்கிறார்கள்...

பிராண்டட் பொருட்கள் உபயோகித்தால் தான் மதிப்பா?

சில நாட்களுக்கு முன்பு வார இறுதியென  நண்பன் வீட்டிற்கு புறப்படலாம் என கிளம்பினால் மழை,சரி கொஞ்சம் பொறுமையா ஆகட்டும் என காத்துக்கொண்டிருந்தேன்.. அந்த இடைவேளையில் என் ரெயின் கோட் தேடினேன் எங்கே வைத்தேன் என தெரியவில்லை பிறகு என் கப்போர்டில்  பார்த்தால் swiggy ரெயின் கோட் புதியதாக இருந்தது நான் கல்லூரி படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக Delivery Executive ஆக வேலை பார்த்தேன் அப்போது சில முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளேன்.. சரி இதை அணிந்து கொண்டு செல்வோம் என எடுத்தேன் ஆனால் உள்ளுக்குள்  ஒரு வித கூச்சம் இருந்தது, பின் "நான் தான் யார் என்ன பார்க்கிறார்கள் என்பதை    பற்றி கவலை கொள்ள மாட்டேன்"பிறகு இதில் என்ன  இந்த கூச்சமும்,வெட்கமும்.. மிஞ்சிப் போனால் சிலர் சிரிப்பார்கள்,சிலர் கேலி செய்வார்கள், சிரிப்பவர்களோ,கேலி செய்பவர்களோ  சொந்த காசு கொடுத்து நமக்கு எதையும் வாங்கிக்கொடுக்க போவதில்லை, அப்படி கொடுக்கவேண்டிய அவசியமுமில்லை... சரின்னு ரெயின் கோட் அணிந்துகொண்டு கிளம்பினேன் போகும் வழியில் ஒரு swiggy நண்பர் என்ன பிரதர் எத்தனை ஆர்டர்னு கேட்க? எதையோ சொல்லி சமாளிச்சு நேரா ...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே  கதை தான் சீட...

குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கி கொடுக்குறீர்களா?

நான் எதையுமே அனுபவிக்கவில்லை,நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைத்தது இல்லை,அதே மாதிரி என் குழந்தைகளுக்கும் ஆகிவிடக் கூடாதுன்னு தான் இப்படி ஓடிகிட்டே இருக்கேன்,செருப்பு மாதிரி  தேயுறேன்னு இங்கு பலர் தன் பிள்ளைகளின் அன்றாடத் தேவைகளையும் நிறைவு செய்துவிட்டு ,ஆடம்பரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேதனைப்பட்டு,துன்பப்பட்டு ,துயரப்பட்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.. எல்லாம் சரி தான் பிள்ளைங்க நல்லா இருக்கணும் ,அவர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைக்கணும்,அவங்க நினைச்சதை படிக்க வைக்கணும் இன்னும் இதுபோல் பல... ஆனால் பணத்தை பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது அல்லவா? முதலில் கேட்பதையெல்லாம் உடனே வாங்கி கொடுப்பதை நிறுத்துங்கள்,இப்படி ஒவ்வொரு பொருளாக வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்கும்போது அவர்கள் மனதில் தோன்றுவது " நமக்கு எல்லாம் கிடைக்குது அடுத்து இதை கேட்போம் அதை விட இது செமையா இருக்குன்னு மற்றொன்றை கேட்பார்கள்" அதுவும் தேவையற்ற பொருளாக தான் இருக்கும் ,( முக்கால் வாசி) ஆனாலும் அதை வாங்கி கொடுப்பீர்கள்,இல்லையெனில் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்,சோர்ந்து வ...