முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார்!!

தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர்  நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள். நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின்  பேசுவார்கள் என காத்திருப்போம்!! ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.   இதற்கு காரணம் : 1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம், 2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும் , எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!! ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி  வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ்  ...

Gpay போன்ற செயலியில் பணம் அனுப்பும்போது இதை கவனிக்கவும்!!

Gpay போன்ற செயலியில்  பணம் அனுப்பும்போது கவனம் !!! சில நாட்களுக்கு எங்கள் பகுதியில் புதியதாக புட் ட்ரக் கடை வறுத்த சாதம் (fried rice )  துவங்கி இருந்தார்கள்,சரி ருசித்து பார்ப்போமே என சென்றோம், அங்கு ஒருவர் ஏதோ பார்சல் கட்டுங்கனு சொல்லிட்டு,வண்டியில் இருக்கும் Gpay ஸ்கேன் பார்த்து  அவரு பாட்டுக்கு டக்குனு UPI Barcode ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டு கடைக்காரரிடம் காட்ட, அவரே ஒரே ஷாக்...! அட என்னப்பா கைல பணம் இல்ல அதனால் Gpay செய்துள்ளார் இதுல என்ன ஷாக் ஆக வேண்டி இருக்கு அதானே!!! அதான் ஆனா அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த UPI ஸ்கேன் கடைக்காரருடையது கிடையாது,இதுக்கு முன்ன இந்த வண்டி வைத்திருந்தவரின் ஸ்கேன் ,இப்போ பணம் கடைக்காரருக்கு போகலை யாருக்கோ போயிருக்கு ,இதுக்கு தான் அந்த ஷாக்க்க்க்.... பின் முகம் எல்லாம் மாறி,இன்னொரு முறை கடைக்காரரிடம் Gpay எண் கேட்டு பணம் அனுப்பினார். உரிமையாளர் மேலும் தவறு உள்ளது, கடை வைத்துள்ளார் இதைக் கூட கவனிக்காமல் வியாபாரம் செய்கிறார்,வாடிக்கையாளரோ ஸ்கேன் செய்து இந்த பெயர் தானா என உறுதி செய்துவிட்டு பணம் அனுப்பி இருந்தால் சிறப்பாக இருந...