முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பணம் பறிக்க துடிக்கும் திருநங்கைகளிடம் உஷார்...!


 மூன்றாம் இனமான  திருநங்கைகள் பற்றி தான் இப்பதிவு...❤

ஒரு மாதத்திற்கு முன்பு கடற்கரைக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டே கடலை ரசித்துக்கொண்டிருந்தோம்..

1 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை ஒரு பக்கம் ஜோசியம்,இன்னொரு பக்கம் வேர்க்கடலை, சுண்டல் மறுபக்கம் டீ, காபி இதையெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது அது அவர்களின் பிழைப்பு..

இரு அரவாணிகள் வந்தனர் பைசா கேட்டனர் இல்லை என சொன்னோம் குடு ராஜானு சொல்லவே இருப்பதை கொடுத்தோம் கிளம்பி விட்டார்கள் சரி என கிளம்பினோம்..

அதற்குள் இன்னொருவர் 

10 ரூபா குடுனு கேட்டாங்க...!!

இல்லக்கா இப்போதான் கொடுத்தோம் என்கிட்ட பெட்ரோல்க்கு தான் காசு இருக்கு...!

பரவால்ல குடு நான் சில்லறை தரேன்னு சொல்ல...!

இல்லக்கா எனக்கு வேணும் நான் வேற எதுவும் பைசா கொண்டு வரலைனு சொன்னேன்...!

அதற்குள் என் கைய புடிச்சி குடுடானு கேட்க...!

என்னுடன் வந்தவர் எதுக்கு கையெல்லாம் புடிக்கிறீங்க கை எடுங்கனு சொல்ல....!

அட ஏம்மா உன்ன நானும் பொண்ணு தானே கை தானே பிடிச்சேன்னு சொல்லி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பேசினார்கள்...!!!

பார்த்து பேசுங்க எங்களுக்கும் பேச தெரியும்னு சொல்ல....!

நானும் பொண்ணு தான் இப்போ தான் சிகிச்சை முடிஞ்சது காசு குடுன்னு கேவலமா நடந்துகிட்டாங்க...!

என்னுடன் இருந்தவர் போலீஸ் கூப்பிடறேன்னு   சொல்ல....!

கூப்பிடு பாக்கலாம் நானும் எங்க ஆளுங்களை கூட்டிட்டு வரேன்னு வந்து என்ன கூத்து அடிக்கிறேன் பாக்குறியானு சொல்ல...

முடிஞ்சா பண்ணுங்கனு சொல்லி நாங்க கிளம்பிட்டோம் அடுத்த பார்ட்டிய பாக்க கிளம்பியாச்சு அவங்க...

ஒத்த பைசா கொடுக்கவில்லை நாகரிகமாக கேட்டாலும் பரவாயில்லை அன்று வந்த கோபத்திற்கு என்னென்னமோ நடந்ததிருக்கலாம் ஆனால் உடந்திருந்தர்வதிகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அமைதியாக வந்துவிட்டோம்..

ஒரு கூட்டத்தின் மேல் எவ்வளவு தான் மதிப்பு இருந்தாலும் ஒரே சம்பவத்தில் அனைத்தையும் சுக்கு நூறாக்குவிடுகின்றனர்...

இச்சமூகம் இன்னும் அவர்களை முழுமையாக எற்றுக்கொள்ளா விட்டாலும் எவ்வளவோ முன்னேறி கேலி, கிண்டல்கள் குறைத்து ,அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கென மரியாதை மாலையை அணிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...

ஒருவர் செய்த செயலுக்காக ஊரையே குற்றம் கூறவில்லை இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..

அரசு பதவி,காவல்துறை, வியாபாரம்,அமைப்பு என எவ்வளவோ சாதித்துக்கொண்டும் இருக்கின்றனர் இப்படியும் பலர்...

சிலரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் இல்லையெனில் உங்கள் மேல் தவறே இல்லையென்றாலும் ஊரே தீயவர் என அழைக்கும் அளவிற்கு வைத்து செய்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

#transgender #transgendersuccess #Respect

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...