மூன்றாம் இனமான திருநங்கைகள் பற்றி தான் இப்பதிவு...❤
ஒரு மாதத்திற்கு முன்பு கடற்கரைக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டே கடலை ரசித்துக்கொண்டிருந்தோம்..
1 நிமிடம் தொடர்ச்சியாக பேசமுடியவில்லை ஒரு பக்கம் ஜோசியம்,இன்னொரு பக்கம் வேர்க்கடலை, சுண்டல் மறுபக்கம் டீ, காபி இதையெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது அது அவர்களின் பிழைப்பு..
இரு அரவாணிகள் வந்தனர் பைசா கேட்டனர் இல்லை என சொன்னோம் குடு ராஜானு சொல்லவே இருப்பதை கொடுத்தோம் கிளம்பி விட்டார்கள் சரி என கிளம்பினோம்..
அதற்குள் இன்னொருவர்
10 ரூபா குடுனு கேட்டாங்க...!!
இல்லக்கா இப்போதான் கொடுத்தோம் என்கிட்ட பெட்ரோல்க்கு தான் காசு இருக்கு...!
பரவால்ல குடு நான் சில்லறை தரேன்னு சொல்ல...!
இல்லக்கா எனக்கு வேணும் நான் வேற எதுவும் பைசா கொண்டு வரலைனு சொன்னேன்...!
அதற்குள் என் கைய புடிச்சி குடுடானு கேட்க...!
என்னுடன் வந்தவர் எதுக்கு கையெல்லாம் புடிக்கிறீங்க கை எடுங்கனு சொல்ல....!
அட ஏம்மா உன்ன நானும் பொண்ணு தானே கை தானே பிடிச்சேன்னு சொல்லி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்த முடியுமோ அவ்வளவும் பேசினார்கள்...!!!
பார்த்து பேசுங்க எங்களுக்கும் பேச தெரியும்னு சொல்ல....!
நானும் பொண்ணு தான் இப்போ தான் சிகிச்சை முடிஞ்சது காசு குடுன்னு கேவலமா நடந்துகிட்டாங்க...!
என்னுடன் இருந்தவர் போலீஸ் கூப்பிடறேன்னு சொல்ல....!
கூப்பிடு பாக்கலாம் நானும் எங்க ஆளுங்களை கூட்டிட்டு வரேன்னு வந்து என்ன கூத்து அடிக்கிறேன் பாக்குறியானு சொல்ல...
முடிஞ்சா பண்ணுங்கனு சொல்லி நாங்க கிளம்பிட்டோம் அடுத்த பார்ட்டிய பாக்க கிளம்பியாச்சு அவங்க...
ஒத்த பைசா கொடுக்கவில்லை நாகரிகமாக கேட்டாலும் பரவாயில்லை அன்று வந்த கோபத்திற்கு என்னென்னமோ நடந்ததிருக்கலாம் ஆனால் உடந்திருந்தர்வதிகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அமைதியாக வந்துவிட்டோம்..
ஒரு கூட்டத்தின் மேல் எவ்வளவு தான் மதிப்பு இருந்தாலும் ஒரே சம்பவத்தில் அனைத்தையும் சுக்கு நூறாக்குவிடுகின்றனர்...
இச்சமூகம் இன்னும் அவர்களை முழுமையாக எற்றுக்கொள்ளா விட்டாலும் எவ்வளவோ முன்னேறி கேலி, கிண்டல்கள் குறைத்து ,அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கென மரியாதை மாலையை அணிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்...
ஒருவர் செய்த செயலுக்காக ஊரையே குற்றம் கூறவில்லை இப்படியும் சிலர் இருக்கிறார்கள்..
அரசு பதவி,காவல்துறை, வியாபாரம்,அமைப்பு என எவ்வளவோ சாதித்துக்கொண்டும் இருக்கின்றனர் இப்படியும் பலர்...
சிலரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் இல்லையெனில் உங்கள் மேல் தவறே இல்லையென்றாலும் ஊரே தீயவர் என அழைக்கும் அளவிற்கு வைத்து செய்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
#transgender #transgendersuccess #Respect

கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️