முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

இடியாப்பம்,புட்டை கொஞ்சம் வெட்டு..!

க்ரோம்பேட்டைகு ஒரு வேலையாக சகோவுடன் சென்றிருந்தேன் வாய் நமநமமென்றது சரி ஏதாச்சும் கொஞ்சமா உள்ள தள்ளுவோம்னு அங்கு இருக்கும் பேக்கரியை பார்த்தால் பொங்கலுக்கு பொங்கிட்டு போய்ட்டாங்க போல அதாங்க லீவு..🤪

சரின்னு வண்டியை நகர்த்திக்கொண்டே சென்றோம் பார்த்தால் புட்டு கடை ,புட்டு சாப்பிட்டு பல மாதங்கள் ஆனது சரி முயற்சி பண்ணுவோம்னு ஒரு கம்பு புட்டு, கடலை கறி சொன்னோம் ஒரு 5 நிமிஷம் சூடா தர்றோம்னு அமர சொன்னாங்க, கடையில் அவ்வளவு கூட்டம் இருக்காதா பின்ன?...

மிகவும் ஆரோக்கியமான உணவுகள் சூடாக,சுவையாக அரிசியில் தயாரிக்கப்பட்ட கம்பு,சிவப்பு அரிசி,கேழ்வரகு,நெய்,தேன் மற்றும் சைட் டிஷ் ருசியான கடலை கறி, தேங்காய் பால்......உடன் நாட்டு சக்கரையும்...

சூடாக பரிமாற  கம்பு புட்டு, தேங்காய் துருவல்கள் உடன் கடலை கறி அடடா....!!!
பல வருடங்கள் கழித்து ஊரில் அத்தை செய்து கொடுக்கும் சுவையை கொடுத்ததுஅவ்வுணவு, அடுத்து நாட்டு சர்க்கரை, நெய் கலந்து புட்டிற்கு தொட்டு உண்டோம் தேவாமிர்தம் தான்... உடன் இருந்தவர் சொர்க்கத்தில் மூழ்கினார், இவ்வளவு வருடங்களில் இதுபோல் உண்டதில்லை அதுவும் நாட்டு சர்க்கரைக்கும் புட்டிற்கும் காம்பினேஷன் வேற லெவல்...👌👌👌

ஒரு சிற்றூண்டிய ஆரோக்கியாக சுவையாக ,உண்ண விரும்பினால் நீங்கள் முயற்சி செய்து வீட்டிற்கும் வாங்கி செல்லுங்கள், அவர்களுக்கும் கொஞ்சம் வேலை  மிச்சம், ஓய்வு,குழந்தைகளுக்கும் "ஓ இப்படியெல்லாம் இருக்கானு தெரிய வரும்"...

இதில் குறிப்பிடப்பட வேண்டிய  விடயம் இக்கடையை நடத்துபவரின் வயது 25 முதல் 30 தான் அவ்வளவு நேர்த்தியாக,தரமாக சுத்தமாக செய்கிறார்கள்..

நல்லா அருமையாக செய்கிறீர்கள், தொடர்ந்து பண்ணுங்கனு வாழ்த்து கூறிவிட்டு திருப்தியாக    வீடு சென்று சேர்ந்தோம்..

கடையின் முகவரி மற்றும் விவரத்தை கீழே  இணைக்கிறேன், 
இடியாப்பம் புட்டு கடை,
வ.உ.சி தெரு,(ராதா நகர் போலீஸ் பூத் அருகில்),க்ரோம்பேட்டை
நேரம் மாலை 5.00 முதல் 10.00 வரை
தொலைபேசி எண் : 81248 70824
கூகுள் மேப் : https://maps.app.goo.gl/gy1vVFBVNQfkF4rR8

விலை  :
இடியாப்பம் ஒன்று 10ரூ
புட்டு 35 ரூ 
கடலை கறி 15ரூ

பயணிப்போம்...!

கருத்துகள்

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...