முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மனிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனிதம் மடிந்து கொண்டிருக்கிறதா,மலர்ந்து கொண்டிருக்கிறதா? இப்புவி அனைத்து உயிர்களுக்குமானது தானே!!!

கடந்த வாரம் இரவு 10 மணி இருக்கும்  வீட்டிற்கு அருகே  வண்டியில் அமர்ந்துகொண்டு நானும் என் நட்பும் பேசிக்கொண்டு இருந்தோம். திடீர்னு டமால்னு சத்தம் சரி என்னனு மெயின் ரோட்டிற்கு சென்று பார்த்தால் நாய்கள்  குலைத்துக் கொண்டு மாட்டை துரத்திக்கொண்டிருந்தது போல, மாடு சாலை பக்கம் ஓட அந்த நேரம் பார்த்து வேகமா வந்த கார் மாட்டின் வலது பக்கத்தில் ஒரே இடி கார் கண்ணாடி,bonnet எல்லாம் சப்பை ஆகி விட மாடு வலியில் துடித்து நடுரோட்டில் சென்று ஆடி அசைந்து நின்றது. கார் ட்ரைவர் வந்த வேகமும் அதிகம் தான், சரக்கா என்னனு தெரியல,நாய்கள் துரத்தி மாடு சாலையில் ஓடியதால் இடித்தாரா என தெரியவில்லை  இதில் யாரை குத்தம் சொல்வது!!! அவர் ஒரு நிமிடம் வெளிய வந்து காருக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ணிட்டு நாங்க வந்ததை பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டாரு. மாடு சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தது அதனால் சிறிதும் நகர முடியவில்லை திடீரென இரு காவலர்கள் வர என்னாச்சனு கேக்க, நாங்களும் சாலையில் வசிக்கும் ஒரு பெரியவரும் சொல்ல அவரு தனக்கு தோன்றிய வசனத்தை சொல்லிட்டு டாட்டா காட்டிவிட்டார்.. "ஆமா கண்ட நேரத்துல மாட்டை அவுத்து வ...