சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
பலரைப் பார்த்துள்ளேன் ஐந்து டிஜிட்டில் சம்பாதிக்கும் நபர்கள் சம்பளம் வந்த 10 முதல் 15 தேதிக்குள் பூஜ்ஜியத்தில் நிற்பார்கள், அவ்வளவு ஏன்? 5 தேதிக்குள் மொத்த பைசாவும் பறந்து மாதம் முழுக்க பத்து பைசாவுக்கு சிங்கி அடிக்க நேரிடும். எப்படா 1 ஆம் தேதி வரும், சம்பளம் வரும்னு அதை நோக்கியே நம் பயணம் இருக்கும், திரும்ப அதே ஓட்டம் தான் வாழ்க்கை முழுக்க. ஆம்,சம்பளம் வந்த உடனே நம் சுய செலவுக்கோ,சேமிப்பிற்கோ ஒரு துளியேனும் எடுத்த வைக்க வில்லையெனில், வீட்டு வாடகை,EMI,மல்லிகை சாமான்,மருத்துவ செலவு,வீட்டு செலவு,வீட்டிற்கு பணம் கொடுப்பது என வெய்யிலில் கரையும் ஐஸ் கட்டியைப் போல் இருந்த இடமே தெரியாமல் உருகி விடும்.. Pay yourself first என சொல்வார்கள்,அதாவது சம்பளம் வந்த பிறகு நம் சேமிப்பிற்கோ,முதலீட்டிற்கோ ஒரு சிறு பகுதி ஒதுக்கி விட வேண்டும்,பின் மீதம் இருக்கும் பணத்தை வைத்து நம் அன்றாட வாழ்வை ஓட்ட முடியும்,ஏனெனில் ஒதுக்கி வைத்த பணத்தை ஒதுக்கியதே நினைவில் இருக்காது,இது பழகியும் போகும்... எவ்வளவு செலவுகள்,கடன்கள் இருந்தாலும் இதை செய்வது தான் சரியென வல்லுனர்கள் சொல்கிறார்கள்...