முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

accident லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

சாலையை கடப்பவர்களுக்கு விபத்து நடப்பது எப்படி? யாருக்கு பாதிப்பு? எப்படி தவிர்க்கலாம்!! | சாலை விபத்து

காலை வேலைக்கு செல்லும்வழியில் சிக்னல் இல்லாத இடத்தில் இரு பெண்கள் (இளைஞ்சிகள்)  சாலையை கடக்க குடுகுடுவென ஓடியிருக்கிறார்கள்.சிக்னல் பச்சை விழுந்தவுடன் வண்டியெல்லாம் பறக்கும்(பறக்க தானே வேண்டும்) அவரவர்க்கு அவரவர் வேலை. இரு பெண்களையும் மோதியுள்ளார்,மோதிவிட்டு ஓடவில்லை அங்கேயே தான் இருந்தார் எனக்கு தெரிந்து அவர்மேல் தவறில்லை, திடீரென வண்டியை மெதுவாக்கி நிறுத்துவது கடினமான செயல் தான்!! இடத்த இடியில்  ஒருவருக்கு கால்,முட்டி கையெல்லாம் அடி, இன்னொரு சகோதரிக்கு கை, கால்,நெற்றி, கண்ணத்திலிருந்து ரத்தம் வந்துகொண்டே இருந்தது,எல்லாம் தண்ணீர் கொடுத்து கொண்டு,ஆம்புலன்ஸிற்கு கால் செய்து கொண்டிருந்தார்கள்,அங்கு வந்த அக்காவிடம் ஒரு துணியை வாங்கி நெற்றியில் மெல்ல கட்டி விட்டோம். ஆம்புலன்ஸ் வர ஏற்றி அனுப்பினோம்.இடித்த நண்பருக்கு இன்று செமஸ்டர் தேர்வு நீங்கள் கிளம்புங்க என சொன்னால் எப்படி ஜி போறது. வண்டியை  திருப்ப முடியவில்லை,சாவி வேறு எடுத்துவிட்டார்கள் அடுத்து போலீஸ் வண்டியை தள்ளி சென்று அவரை கொண்டு கூட்டி சென்றனர் என்னாச்சோ தெரியவில்லை,வழியில் கோவிலில் நின்று கும்பிட்டு சென்...

மனிதம் மடிந்து கொண்டிருக்கிறதா,மலர்ந்து கொண்டிருக்கிறதா? இப்புவி அனைத்து உயிர்களுக்குமானது தானே!!!

கடந்த வாரம் இரவு 10 மணி இருக்கும்  வீட்டிற்கு அருகே  வண்டியில் அமர்ந்துகொண்டு நானும் என் நட்பும் பேசிக்கொண்டு இருந்தோம். திடீர்னு டமால்னு சத்தம் சரி என்னனு மெயின் ரோட்டிற்கு சென்று பார்த்தால் நாய்கள்  குலைத்துக் கொண்டு மாட்டை துரத்திக்கொண்டிருந்தது போல, மாடு சாலை பக்கம் ஓட அந்த நேரம் பார்த்து வேகமா வந்த கார் மாட்டின் வலது பக்கத்தில் ஒரே இடி கார் கண்ணாடி,bonnet எல்லாம் சப்பை ஆகி விட மாடு வலியில் துடித்து நடுரோட்டில் சென்று ஆடி அசைந்து நின்றது. கார் ட்ரைவர் வந்த வேகமும் அதிகம் தான், சரக்கா என்னனு தெரியல,நாய்கள் துரத்தி மாடு சாலையில் ஓடியதால் இடித்தாரா என தெரியவில்லை  இதில் யாரை குத்தம் சொல்வது!!! அவர் ஒரு நிமிடம் வெளிய வந்து காருக்கு என்ன ஆச்சுன்னு செக் பண்ணிட்டு நாங்க வந்ததை பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டாரு. மாடு சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தது அதனால் சிறிதும் நகர முடியவில்லை திடீரென இரு காவலர்கள் வர என்னாச்சனு கேக்க, நாங்களும் சாலையில் வசிக்கும் ஒரு பெரியவரும் சொல்ல அவரு தனக்கு தோன்றிய வசனத்தை சொல்லிட்டு டாட்டா காட்டிவிட்டார்.. "ஆமா கண்ட நேரத்துல மாட்டை அவுத்து வ...

வாகனங்களில் இருக்கும் பாகங்கள் இதற்கு தானா?

இரு சக்கர/கார்/மிதிவண்டி வாகனம், நடை/ஓட்டம் என நாம் அன்றாடம் செய்யும்\ உபயோகிக்கும் நமக்கு தான்  இப்பதிவு...! ● கண்ணாடி (Mirror) வண்டியில் இருபக்கமும் கண்ணாடி ( mirror) வைத்துக்கொள்ளுங்கள், பலர் அதை ஒரு இடையூறாக கருதி எடுத்து விடுகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் சந்து பொந்துகளில் புகுந்து போக  அதை கழட்டி வீசி விடுகின்றனர், நானே சிறுவயதில் முகம் பார்க்க தான் என நினைத்துள்ளேன் பிறகு தான் புரிந்தது,.. எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பார்த்து வேறு  வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்து வளைய வேண்டும் இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட நேரிடும்.. ஆக கண்ணாடி வச்சிக்கோங்க பா.! ● குறிப்பீடு ( indicator)   ஒவ்வொரு முறை திரும்பும்போதும்/ வளையும்போதும் இந்த இண்டிகேட்டரை எந்தப் பக்கம் திரும்பி வேண்டுமோ அந்த பக்கம் ஆன் செய்து காட்டினாள் பின்னால் வருபவர்கள் உங்கள் வாகத்தில் ஒலிக்கும் ஒளியை/ஒலியை  பார்த்து, கேட்டு கவனமாக நகர்வார்கள்.. இதை  உங்கள் தெருவில் இருந்து முயற்சியுங்கள் அப்போது தான் அது ஒரு பழக்கமாக மாறும்.. மிதிவண்டி ஓட்டுபவர்கள் கையில் சைகை காட்டுங்கள் இல்லையெனில் ...