சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
(விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்)
ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்......
2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன்.
அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲.
படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீங்க" என்பது என் குரல் மட்டுமல்ல திரை அரங்கில் இருந்த அனைவரின் குரலும் மனதில் இல்லாமல் வெளிப்படையாக கத்தினர். அவதார் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமென்பாதலேயே கதை சரியாக இருக்கிறதா,திரைக்கதை ஒழுங்காக அமைத்துள்ளோமா என்பதை எல்லாம் பார்க்காமல் 3டி,அவதார்னு பேர் இருக்கு, எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது என எண்ணி ஏனோ தானோ என்று படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர் போலும்.
டேய் மச்சி வாடா இடையவேளைல வீட்டிற்கு போலாம் டிவி கூட ஏதாச்சும் பார்க்கலாம் டேய் விளையாட்டிற்கு சொல்லலை நிஜமா,ஏன்னா இண்டெர்வெல் சீனில் வேற படம் பாதி ஸீன் போட்டா கூட போதும்னு' கத்தினேன்😫 அவ்ளோ முடியவில்லை.
Visuals 3டி பெரிதாக ஒன்றும் இல்லை,இசை, சவுன்டு எபக்ட்ஸ் எல்லாம் ஓகே தான்,சில இடங்களில் வசனமெல்லாம் நன்றாக இருந்தது.கதை போக போக எப்பா எப்படா முடியும்னு தோணிகிட்டே இருக்க,படமும் முடிஞ்ச பாடில்லை கடைசியில் முடிஞ்சிடுச்சு என் சொலியும்.
அவ்வளவு தானா என்றால் இல்லை, விமானப்படை தாக்கும் காட்சி,கப்பல் வரும் காட்சிகள்,சில கடல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தது.
மொத்தத்தில் திரையரங்கு போய்ட்டு செமையா 3டி பாக்கணும்னு போனீர்கள் என்றால் சத்தியமாக ஏமாற்றம் நிச்சயம்.ஆக பொறுமையாக HD வந்தபிறகு 2டியில் வீட்டில் பாருங்கள் (அவசியம் பார்க்க வேண்டுமெனில்) .அதுற்கு பதில் நம்ம வடிவேலு படம் "நாய் சேகர் ரிடர்ன்ஸ்" பாத்து சும்மா லேசா சிரிச்சிக்கலாம்..
இவ்வளவு பெரிய படம் எடுப்பது எளிதில்லை
அவ்வளவு காலம் ,நேரம்,உழைப்பு,பணம் எல்லாம் கொட்டி முயற்சி செய்துள்ளார்கள்,வாழ்த்துக்கள்♥️
எந்த விடயத்தையும் நல்லா இல்ல,மொக்கைன்னு சொல்ல மனசே வராது அது கேவலமாக இருந்தாலும் ம்ம் ஒரு முறை பார்க்கலாம் ஆனால் இன்னும் கொஞ்சம் சரியாக செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று தான் சொல்வேன். ஆனால் 3 மணிநேரம் 12 மணிநேரத்தில் 12 நிமிடம் நன்றாக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
நெக்ஸ்டு ரெஸ்டு😫😫😴😴😴
✍️ அசோக் குமார் சுதர்சனம்
#Avatar2 #AvatarTheWayOfWater #avatarreview #moviereview #TamilmovieReview #akwrites #tamilblogger #blogger #tamil #3Dmovie
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️