சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
வார்த்தைகள் அழிக்கும்!!
வார்த்தைகள் சீரழிக்கும்!!
வார்த்தைகள் அவமானப்படுத்தும்!!
வார்த்தைகள் அழ வைக்கும்!!
வார்த்தைகள் கொள்ளும்!!
வார்த்தைகள் சாகத் தூண்டும்!!
வார்த்தைகள் காயங்கள் ஏற்படுத்தும்!!
அதே வார்த்தைகள்.....
வார்த்தைகள் உங்களை வளர்க்கும்!!
வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கும்!!
வார்த்தைகள் உங்களை பாராட்டும்!!
வார்த்தைகள் உங்களை செழிப்பாக்கும்!!
வார்த்தைகள் உங்களை பெருமையாக உணரச் செய்யும்!!
வார்த்தைகள் உங்களை கொண்டாடும்!!
வார்த்தைகள் உங்களை குளிர்விற்கும்!!
வார்த்தைகள் உங்களை மெருகேற்றும்!!
வார்த்தைகள் உங்களை அழகாக்கும்!!
வார்த்தைகள் உங்களை அறிவாளி ஆக்கும்!!
வார்த்தைகள் சாந்தப்படுத்தும்!!
வார்த்தைகள் சமாதானம் செய்யும்!!
வார்த்தைகள் உங்களை செதுக்கும்!!
வார்த்தைகள் காயங்களை ஆற்றும்!!
வார்த்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும்!!
வார்த்தைகள் வாழத் தூண்டும்!!
வார்த்தைகள் சாதிக்க தூண்டும்!!
அதே வார்த்தைகள்..... என்னென்ன செய்யும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்!?
வார்த்தைக்கு மிகப்பெரும் சக்தி உண்டு அது நாம் மற்றவர்களுக்கு கொடுத்தாலும்,மற்றவர்கள் நமக்கு கொடுத்தாலும்,அவ்வளவு ஏன் நமக்கு நாம் என்ன வார்த்தைகள் சொல்கிறோம்,நமக்குள் நாம் என்ன பேசுகின்றோம் என்பதும் மிக முக்கியம்.
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வாய் உண்டு,மொழி உண்டு.ஏன் நாய்,பூனைக்கு கூட வாய் இருக்கிறது.என்ன அது பேசும் மொழி நமக்கு புரியவில்லை,இனி வாயில்லாத ஜீவன் என்று சொல்வதை தவிர்க்கும்.😅
நீங்கள் பேசும் அனைத்துப் பேச்சிற்கும் எதிர் பேச்சு பேச அனைவருக்கும் தெரியும்,ஏன் பேசாமல் இருக்கிறார்கள் ஒன்று உங்களுக்காக,இல்லையெனில் பொறுமையாக கடந்து செல்கின்றனர்.நீங்கள் என்ன பேசினாலும் உங்களுக்கு ஒன்றெனில் அந்த ஜீவன்கள் தான் முதலில் நிற்பார்கள்.
வாழும் வரை நம் வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்தாமல் வாழ்வோம்,இந்த பிரபஞ்சத்தில் எண்ணங்களால் தான் ஒவ்வொன்றும் நிகழ்கிறது,எண்ணங்களும்,வார்த்தைகளும் நேர்மறையாக இருந்தால் நேர்மறையான விளைவுகள்.எதிராலிக்கு என்ன நினைக்கிறீர்களோ அது உங்களுக்கே நிகழும்.
எண்ணம் போல் வாழ்க்கை
✍️ அசோக் குமார் சுதர்சனம்
#words #powerofwords #thoughts #lawofattraction #tamilblogger #tamilwriteups #AK #magiclife #blogger #blogs
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️