சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
மறதி மனிதனின் இயல்ப பலவற்றை படிப்பது மட்டுமல்லாமல் செயல் படுத்தினால் மட்டுமே வாழ்க்கை உயரும் நாமும் உயர்வோம். அனைவருக்கும் 24 மணிநேரம் தான் ,நேரம் இல்லை என கூறுபவர்கள் இதிலிருந்து தப்பிக்க கூறிகள் வழிகள் தான் இந்த வெட்டி வார்த்தைகள். நமக்கான நேரத்தை நாம் தான் ஒதுக்க வேண்டும். 1.உடற்பயிற்சி எந்தவித சாக்கு போக்கும் இல்லாமல் குறைந்தபட்சம் 20 நிமிடவாது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அது ஓட்டம்,ஆட்டம்,நடை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். இதனால் உடலும் சரியான எடையில் கச்சிதமாக இருக்கும்,மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். 2.புத்தகம் வாசிப்பது இவ்வுலகில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது அவர்களின் பழக்கம்,கற்றல் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே இருக்கும். புத்தகம் வாசிப்பதினால் புதிய விழியங்களை கற்றுக்கொள்ளலாம்,புத்தகம் நம்மை ஊக்குவிக்கும், புத்தகம் பல சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும்,நமக்கென ஒரு உலகத்தை புத்தகத்தில் காணலாம். சற்று கடியான காரியம் தான் ஆனால் சரியான காரியங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் கசக்கவே செய்யும்,பிறகு இனிமும் முயற்...