சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
பிள்ளைகள் ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டும்,மது,மாது,பெண்களை பாலியல் தொந்தரவு செய்து கொண்டும், இருக்கும் தீய செயல்களை எல்லாம் செய்யும் பிள்ளைகளை சமுதாயம் சொல்வது.. பெற்றவர்களின் வளர்ப்பு சரியில்லை! இதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை, ஒரு வயது வரை தான் குழந்தைகளுக்கு நாம் சொல்வது எல்லாம் ஓரளவுக்கு மண்டைக்குள் ஏறும் நீங்க என்ன தான் அருமையான போதனைகளை சொல்லி அற்புதமான வழியில் வளர்த்தாலும் அவர்கள் தடம் மாறி போனால் நாம் பொறுப்பில்லை.. ஆம், நீங்கள் எப்படி வளர்த்தீர்கள் என்பதில் இல்லை ஒழுக்கம்,அவர்கள் எப்படி வளந்தார்கள் என்பதில் இருக்கிறது, அவர்கள் படிக்கும்,பார்க்கும் விடயங்கள் ,அவர்கள் சிந்தனைகள்,முக்கியமாக அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள்,நண்பர்கள் தான் இதற்கு காரணி.என்னதான் நாம் கட்டுக்கோப்பாக இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ எப்படி இருக்கிறார்களோ நம்மை அறியாமலே அப்படி ஆகிவிடுவோம்.. நாமே நமக்கு ஓர் எல்லையை நிர்ணயித்துக் கொள்ளவில்லையெனில் தடம் மாறி போக வாய்ப்புகள் அதிகம், அவர்களை அவ்வளவு எளிதில் திருத்தி விட முடியாது பட்டு திருந்தினால் மட்டுமே ப...