முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

dhanush லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

தமிழ் படத்தில் ஏன் மற்ற மொழிகளை திணிக்கன்றனர்? இதெல்லாம் தேவையில்லாத வேலை!!!

இதை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் ஏனெனில் படத்தை படமாக ,பொழுதுபோக்கு போக்கை பொழுது போக்காக பார்ப்பது தானே நம் பழக்கம் ஆனால் நாம் அதிகம் விரும்பும் சினிமா,நாடகம்,குழந்தைகள் பார்க்கும் கார்டூன்ஸ் போன்றவற்றின் மூலம் தான் நம் மனதில் எதை திணிக்க நினைக்கிறார்களோ அதை சிறு வயது முதலே சிறப்பாக திட்டமிட்டு செய்கின்றனர். நம் தமிழ்நாட்டில்,நம் அக்கம் பக்கத்தில் மற்ற இனத்தினரும் ஒன்றாக தான் நண்பர்களாக வாழ்கிறோம்.ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏன் தமிழ் படத்திற்குள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என ஒரு குடும்பத்தை அறிமுகம் செய்து அதிலும் மேலே தமிழ் கூட டப் செய்யாமல் மற்ற மொழியிலையே பேசுகின்றனர். ஏன் கீழே ஆங்கிலத்தில் கூட என்ன பேசுகிறார்கள் என்பதை போடுவதில்லை. இதே போல் மற்ற மாநில திரையுலகில் செய்தால் படக்குழுவினருக்கு செருப்படி விழும். ஒரு படம் என்பது எந்த மொழியில் எந்த மாநிலத்தில் வெளியிடுகிறார்களோ அந்த மொழியில் முழுவதும் இருப்பது தானே சரி. என்ன கூற நினைக்கிறார்கள் என நினைத்தால் தமிழர்களை விட நாங்கள் அதிகம் வசிக்கிறோம்,நாங்கள் பெரும்பாண்மை,வீட்டில் மட்டும் எங்கள் தாய் மொழியை பேசிவிட்ட...