முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

வார்த்தைகள் ஆக்கும், அழிக்கும்!!!

வார்த்தைகள் அழிக்கும்!! வார்த்தைகள் சீரழிக்கும்!! வார்த்தைகள் அவமானப்படுத்தும்!! வார்த்தைகள் அழ வைக்கும்!! வார்த்தைகள் கொள்ளும்!! வார்த்தைகள் சாகத் தூண்டும்!! வார்த்தைகள் காயங்கள் ஏற்படுத்தும்!! அதே வார்த்தைகள்..... வார்த்தைகள் உங்களை வளர்க்கும்!! வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கும்!! வார்த்தைகள் உங்களை பாராட்டும்!! வார்த்தைகள் உங்களை செழிப்பாக்கும்!! வார்த்தைகள் உங்களை பெருமையாக உணரச் செய்யும்!! வார்த்தைகள் உங்களை கொண்டாடும்!! வார்த்தைகள் உங்களை குளிர்விற்கும்!! வார்த்தைகள் உங்களை மெருகேற்றும்!! வார்த்தைகள் உங்களை அழகாக்கும்!! வார்த்தைகள் உங்களை அறிவாளி ஆக்கும்!! வார்த்தைகள் சாந்தப்படுத்தும்!! வார்த்தைகள் சமாதானம் செய்யும்!! வார்த்தைகள் உங்களை செதுக்கும்!! வார்த்தைகள் காயங்களை ஆற்றும்!! வார்த்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும்!! வார்த்தைகள் வாழத் தூண்டும்!! வார்த்தைகள் சாதிக்க தூண்டும்!! அதே வார்த்தைகள்..... என்னென்ன செய்யும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்!? வார்த்தைக்கு மிகப்பெரும் சக்தி உண்டு அது நாம் மற்றவர்களுக்கு கொடுத்தாலும்,மற்றவர்கள் நமக்கு கொடுத்தாலும்,அவ்வளவு ஏன்...

பெரிசுகள் பரிதாபங்கள் ❗❗ செல்போன்ல டவுட்டு கிளியர் பன்னது குத்தமா😲😫

பெருசுகள் பரிதாபங்கள்😀 போனில் ஏதாவது சந்தேகம்,இவர்களுக்கு கால் செய்ய வேண்டும்,வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும்,படம் தரவிறக்கம் செய்யவேண்டும் அது இதுவென்று எத்தனை சந்தேகம் என்றாலும் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூகுள் அல்லது யூ டூயூப்பில் அல்லது வேறு யாரிடமோ கேட்டு கூட அவர்கள் கேட்ட விடயத்தை செய்து கொடுப்போம். நான் எப்போதும் செய்து கொடுப்பதைவிட, எப்படி செய்ய வேண்டுமென்பதை சுலபமாக சொல்லி கொடுத்துவிட்டால் அவர்களே அடுத்த முறை ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருக்காமல் செய்து விடுவார்கள்.சிலர் கற்றுக்கொள்ள கூட மாட்டார்கள் அது வேற கதை. எல்லாம் செய்து கொடுத்த பின்பு " டேய் தம்பி உன்கிட்ட போனை கொடுத்தது தப்பா போச்சு டா பார்ரா இது ஒர்க் ஆகவே  இல்லை" என நம்மேல் பாய வருவார்கள். எப்பா சாமி உங்களுக்கு செய்துகொடுத்தற்கு நம்மை செய்து விடுவார்கள்😫 எப்புற்ரா.....!  சமீபத்தில் ஒருவருக்கு போனில் டிவி சானல்கள் பார்க்க வேண்டும் என சொல்ல ,செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்தேன்.சில நிமிடங்களில் டேய் "என்னடா  கால் வருது ஆனா எந்த பெயரும் காட்ட மாட்டேங்குதுனு" சொல்ல அரை மணிநேரம...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...