முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

money லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...

Gpay போன்ற செயலியில் பணம் அனுப்பும்போது இதை கவனிக்கவும்!!

Gpay போன்ற செயலியில்  பணம் அனுப்பும்போது கவனம் !!! சில நாட்களுக்கு எங்கள் பகுதியில் புதியதாக புட் ட்ரக் கடை வறுத்த சாதம் (fried rice )  துவங்கி இருந்தார்கள்,சரி ருசித்து பார்ப்போமே என சென்றோம், அங்கு ஒருவர் ஏதோ பார்சல் கட்டுங்கனு சொல்லிட்டு,வண்டியில் இருக்கும் Gpay ஸ்கேன் பார்த்து  அவரு பாட்டுக்கு டக்குனு UPI Barcode ஸ்கேன் செய்து பணம் அனுப்பி விட்டு கடைக்காரரிடம் காட்ட, அவரே ஒரே ஷாக்...! அட என்னப்பா கைல பணம் இல்ல அதனால் Gpay செய்துள்ளார் இதுல என்ன ஷாக் ஆக வேண்டி இருக்கு அதானே!!! அதான் ஆனா அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த UPI ஸ்கேன் கடைக்காரருடையது கிடையாது,இதுக்கு முன்ன இந்த வண்டி வைத்திருந்தவரின் ஸ்கேன் ,இப்போ பணம் கடைக்காரருக்கு போகலை யாருக்கோ போயிருக்கு ,இதுக்கு தான் அந்த ஷாக்க்க்க்.... பின் முகம் எல்லாம் மாறி,இன்னொரு முறை கடைக்காரரிடம் Gpay எண் கேட்டு பணம் அனுப்பினார். உரிமையாளர் மேலும் தவறு உள்ளது, கடை வைத்துள்ளார் இதைக் கூட கவனிக்காமல் வியாபாரம் செய்கிறார்,வாடிக்கையாளரோ ஸ்கேன் செய்து இந்த பெயர் தானா என உறுதி செய்துவிட்டு பணம் அனுப்பி இருந்தால் சிறப்பாக இருந...

மிடில் கிளாஸ் சாமானியனின் வாழ்க்கை இவ்வளவு வலிகள் நிறைந்ததா?

இந்த மிடில் கிளாஸ்,ஹை கிளாஸ்,லோ கிளாஸ் எல்லாமே இச்சமுதாயம் உருவாக்கியது தான் ,அதுவும் பணத்தின் அடிப்படையில் மட்டும் இவை கணக்கிடப்பட்டு இவர்கள் லோ கிளாஸ்,இவர்கள் ஹை க்ளாஸ் என பெரும் பட்டத்தை கொடுக்கிறது இச்சமூகம்.சமூகம் கொடுக்கிறதோ இல்லையோ நாமே நம்மை இப்படி அழைத்துக்கொள்வோம். என்ன வாழ்க்கை டா இது!!!! ஒன்னு பணக்காரராக இருந்திடனும்,இல்ல லோ கிளாஸ்ஸா இருந்திடனும் ,இப்படி மிடில் கிளாசில் பிறந்து ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறோமே,ச்சே என்ன வாழ்க்கை டா இது....! ஆசைப்பட்ட பொருளையோ,உணவையோ நினைத்தவுடன் வாங்க முடியாது, வாடகை வீடு,வாங்கிய பொருளுக்கு மாதாமாதம் EMI, குடும்ப கடன்கள்,நெருக்கமானவர்களுக்கு ஒரு பொருளை கூட வாங்கிக்கொடுக்க முடியாத சூழல்,சம்பாதித்த பணம் எல்லாம் கடனுக்கும்,வீட்டிற்கும் போக ஆசைப்பட்ட இடத்திற்கு போகவோ,வேண்டியதை வாங்கவோ பணம் இல்லாமல் அம்மாதத்தை ஓட்டுவது,சரியான உடை கூட அணிய முடியாத அளவிற்கு வறுமை,நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சே,வாழ்க்கைல எப்படியாச்சும் மேல வந்துடனும்,நம்ம தூற்றியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டணும் ,வேற லெவல் வாழனும்னு வெளியில் கம்பீரமாக சற்றுக் கொண்டும் ஸ்டே...

செலவுகளை குறைப்பது எப்படி?

பல மாதங்களாகவே தலைக்கவசத்தில் இருக்கும் கண்ணாடியை மாற்றவேண்டுமென்றிருந்தேன் முழுவதும் சேதமாகி கீறளுடன் இருந்ததால் சாலை தெளிவாக தெரிவதில்லை, மழை பெய்யும் வேளையில் முகத்தில் தண்ணீர் அதிகம் அடிக்கிறது,முக்கியமாக தூசிகள் முகத்தில் படாமலும்,பாதுகாப்புக்காகவும் இந்த கண்ணாடி உபயோகமாகிறது... அதனால் இன்று வண்டியின் சீட் தைக்கவேண்டுமென கடைக்கு சென்றேன் அப்படியே இதையும் மாற்றுவோம் என கேட்டேன் ஒரிஜினல் 200 ரூபாய், டூப்ளிகேட் 160 என்கிறார்கள் பணத்தில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால் 200 ரூபாய் கொடுத்து மாற்றிவிட்டேன் அதில் வெளியே வந்த ரப்பரையும் கடைக்காரர் சரி செய்து கொடுத்துவிட்டார் பயணமும் தெளிவாக அற்புதமாக இருந்தது.. வீட்டிற்கு வந்து "அப்பா இங்க பாரு ஹெல்மெட் கண்ணாடி மாத்திட்டேன்னு சொன்னேன் !!" எதுக்கு டா புதுசே வாங்கி இருக்கலாம்லனு கேட்டார்? இல்லப்பா இதுல இது மட்டும்தான் பிரச்சனை மத்தபடி ஹெல்மெட் அருமையா இருக்குனு சொன்னேன் சரினு சொன்னார்.. Vega பிராண்ட்டில் இந்த மாடல் 1000ரூ ஆகிறது எதற்கு தேவையில்லாமல் புதிய தலைக்கவசம் இதை சரி செய்துவிட்டேன் அருமையாக இருக்கிறது... இதே  கதை தான் சீட...