சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
இரு சக்கர/கார்/மிதிவண்டி வாகனம், நடை/ஓட்டம் என நாம் அன்றாடம் செய்யும்\ உபயோகிக்கும் நமக்கு தான் இப்பதிவு...!
● கண்ணாடி (Mirror)
வண்டியில் இருபக்கமும் கண்ணாடி ( mirror) வைத்துக்கொள்ளுங்கள், பலர் அதை ஒரு இடையூறாக கருதி எடுத்து விடுகின்றனர், குறிப்பாக இளைஞர்கள் சந்து பொந்துகளில் புகுந்து போக அதை கழட்டி வீசி விடுகின்றனர்,
நானே சிறுவயதில் முகம் பார்க்க தான் என நினைத்துள்ளேன் பிறகு தான் புரிந்தது,..
எந்த பக்கம் திரும்பினாலும் அதைப் பார்த்து வேறு வாகனம் ஏதாவது வருகிறதா என பார்த்து வளைய வேண்டும் இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட நேரிடும்..
ஆக கண்ணாடி வச்சிக்கோங்க பா.!
● குறிப்பீடு ( indicator)
ஒவ்வொரு முறை திரும்பும்போதும்/ வளையும்போதும் இந்த இண்டிகேட்டரை எந்தப் பக்கம் திரும்பி வேண்டுமோ அந்த பக்கம் ஆன் செய்து காட்டினாள் பின்னால் வருபவர்கள் உங்கள் வாகத்தில் ஒலிக்கும் ஒளியை/ஒலியை பார்த்து, கேட்டு கவனமாக நகர்வார்கள்..
இதை உங்கள் தெருவில் இருந்து முயற்சியுங்கள் அப்போது தான் அது ஒரு பழக்கமாக மாறும்..
மிதிவண்டி ஓட்டுபவர்கள் கையில் சைகை காட்டுங்கள் இல்லையெனில் உங்களுக்கும் டமால் டுமீல் தான்...!..
● தலைக்கவசம் ( Helmet )
பொதுவாகவே தலைக்கவசம் அணிவது கடியான வேலை தான்(எனக்கும் தான்) ஆனால் நம் மண்டை , உடம்பு முழுக்க இருக்கும் அறிவை சேர்த்து வைத்திருக்கும் மூளையை பாதுகாக்க அது அவசியம்..
ஆமாம் தலை பாரமாக தான் இருக்கும், முடி அறிக்கும், வியர்வை வரும் எல்லாம் சரி தான் ஆனா உயிர் முக்கியம் அமைச்சரே..
உனக்காக பல உயிர்கள் வீட்டிலும்,நாட்டுலும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், எவ்வளவு கடுப்பாக,கடியாக இருந்தாலும் பரவாயில்லை தலைகவசம் அணிவோம்...
எங்கோ படித்தது : "போலீஸ்க்கு அழனும்னு (பணம்) ஹெல்மெட் போடாத,
உன் பொண்டாட்டி புள்ளைங்க அழுதிடக் கூடாதுனு ஹெல்மெட் போடு"..
● இருக்கைப்ட்டை (seat belt)
சீட் பெல்ட் போடுவதென்றால் இங்கு பலர் மூக்கால் அழுவார்கள், அதை அணிவது அவசியமும் கூட, ஓட்டுனர் கூட அணிந்துவிடுவார் ஆனால் பக்கத்து இருக்கையில் இருப்பவர் அலும்பல் தாங்க முடியாது,
இருக்கைப்பட்டை அணியவில்லையென்றால் நீங்கள் மட்டை..
● ஹார்ன் ( horn)
பல நாடுகளில் ஹார்ன் அடிக்க கூடாது குற்றமும் கூட சில வருடங்களுக்கு முன்பு அன்பு சகோதரர் மருத்துவர் Hariharan V அவர்கள் ஹார்ன் பற்றியும் வெளிநாடுகளில் இதை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதையும் தன்னுடைய பயணம் ஹார்ன் சத்தமில்லாமல் எப்படி இருக்கிறது என்பதையும் எழுதி இருந்தார் அன்று முதல் இன்று வரை தேவையில்லாமல் ஹார்ன் அடிப்பதில்லை...
ஹாரன் அடிப்பது " டேய் தள்ளி போடா நான் வந்துகிட்டு இருக்கேன்ல"னு மிரட்டுவதற்கு சமம், நம் நாட்டில் இதை பின்பற்றுவது சற்று சிரமம்தான் முயற்சித்து பாருங்கள் பயணம் நிம்மதியாக இருக்கும்..
இதைப்பற்றி எழுத இன்னும் பல உள்ளது நேரம் கிட்டும் போது எழுத முயற்சிக்கிறேன்,
ஆக ஹெல்மெட்,இண்டிகேட்டர்,சீட் பெல்ட்,கண்ணாடி,ஹார்ன் இதெல்லாம் உபகோகப்படுத்தி சூதானமா இருந்துகொங்க.....
#roadsafety #WearHelmet #WearSeatBelt #safetyawareness
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️