முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

2020

பலருக்கு பாரமாக சிலருக்கு பிரமாதமாக கடந்துவிட்டது,இங்கு புலம்புபவர்களில் பலரும் இவ்வருடத்தை தேவையில்லாத ஆணி என்று தானே அழுதுகொண்டிருந்தனர்...

என்ன செய்ய முடியும்?
 எண்ணில் மட்டும் கூடுதலாக ஒன்று சேருமே தவிர வேறேதும் மாற்றம் அடைந்துவிடுவதில்லை நாம் மாறும் வரை ,நாம் மாற்றும் வரை...

ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்திய கொரோனா லட்சக்கணக்கான மக்களை கொன்றது,பலரை பாதித்தது,மக்கள் ஒரு நாள் உணவு உண்ணவே சிரமம்,வீட்டு வாடகை,மருத்துவரை/மருத்துவமனை போக முடியாமல்,வைத்தியம் பார்க்க முடியாமல் உயிர்கள் பலி, பலருக்கு வேலைகள் பறிபோயின, தொழில்கள் மடிந்தது, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு,க்ளைமாக்ஸில் வெள்ளம் வந்து அடித்தட்டு மக்களை,ஏரியில் வீடுகள் இருக்கும் பகுதிகளை சேதப்படுத்தியது,பலரின் தற்கொலை,மரணம் இன்னும் ஏராளம்...!

மறுபக்கம் பலரின் திறமைகள் வெளிவந்தது, வலைஒலி சேனல்கள் உருவாகின,வேறு வழியில் பணத்தை உருவாக்க பல தொழில்கள் உருவாயின, வேலை கிடைத்துள்ளது,குறைந்த செலவில் லாக்டவுன் திருமணங்கள்,ஊரை விட்டு நகரத்தில் வேலை செய்யும் பலருக்கு ஊரில் பெற்றோர்களுடன் இயற்கையுடன் வாழ, வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது,தன் திறமைகளை மேம்படுத்த ஏராளமான நேரம், அதுமட்டுமில்லாமல் இதுவரை  வாழ்வில் யாருக்கும் கிடைக்காத அளவிற்கு ஒரு பெரும் (space) இடம் கிடைத்ததது...

ஆக இது எதையும் நம்மால் மாற்ற முடியாது, அனைத்து இன்பங்கள்,துன்பங்களை எனும் வாழ்க்கை எனும் வண்டியில் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்...

இப்போ new year resolutionனு தொடங்குவார்கள் ஒரு வாரம் மாங்கு மாங்குனு செய்து விட்டு அவர்களின் தன்னிலைக்கே வந்துவிடுவார்கள்..

"நான் இனி ஓடிக்கிட்டே இருப்பேன்னு சொன்னா எப்போயாச்சும் எப்படியாச்சும் நிப்பாட்டிடுவோம் , ஒவ்வொரு நாளும் உறுதிமொழி ஏற்க வேண்டும், இன்று நான் செய்வேன் என ஒவ்வொரு நாளும் சொன்னால் நிச்சயம் செய்வோம் அதற்கு சுயஒழுக்கம் அவசியம்..

கடந்து காலம் கடந்துவிட்டது போகட்டும், ஒவ்வொருவருக்கும் இலக்குகள் இருக்கும்,
அதை எழுதுங்கள்,ஆழ்மனதில் பதிய வையுங்கள்,மற்றதெல்லாம் தானாக நடக்கும், உங்களுக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிடாமல் பயன்படுத்துங்கள் ,வயது என்பது ஒரு எண் மட்டுமே தொடந்து உங்கள் இலக்கில் பயணித்து வெற்றியடைய என் வாழ்த்துக்கள்..

முடித்தளவு யாரையும் காயப்படித்தவேண்டாம்,அவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துங்கள்,உனக்கு நான் இருக்கேன்னு சொல்லுங்கள், ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள், பணம் சேமிக்கும் பழக்கத்தை தொடர்ந்து செய்யுங்கள்,புத்தகம் படியுங்கள்,உடற்பயிற்சி செய்யுங்கள்,பெற்றோர்களை/குடும்பத்தை/ நண்பர்களை மதியுங்கள்,ஈகோ இல்லாமல், கோபம் கொள்ளமல் வாழப் பழகுங்கள்...

இது அறிவுரை அல்ல  உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமேன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்,உங்கள் மனதிற்கு தெரியும் எதை எடுத்துக்கொள்ளலாம்,எதை தவிர்க்கலாம் என...!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️

#HappyNewYear2021 #newyear #newyearsresolution #lastppostoftheyear

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...