சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
தலைப்பை பார்த்த உடன் பதற வேண்டாம்,நாம் தொலைபேசியில் அழைக்கும் நபர் நம் அழைப்பை ஏற்க வில்லையென்றால் இந்த வசனம் தான் ஒலிக்கும்.இதனால் எவ்வளவோ குடும்பத்தில்,உறவில் மோதலும்,பிரிவும் நடந்துள்ளது,ஏன் கொலை வரை கூட சென்றுள்ளது.இப்போது இதை "நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார் காத்திருக்கவும் அல்லது பின்னர் அழைக்கவும்" என மாற்றி விட்டார்கள்.
நாம் ஒருவருக்கு கால் செய்தால் ஏற்க மாட்டார்கள் அல்லது துண்டிப்பார்கள்,நாமோ சரி ஏதோ வேலையில் இருப்பார்கள் அல்லது வாகனம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் நம் அழைப்பை பார்த்த பின் பேசுவார்கள் என காத்திருப்போம்!!ஆனால் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.
இதற்கு காரணம் :
1.உங்களிடம் பேச விருப்பம் இல்லாமல் புறக்கணிக்கலாம்,
2.பேசும் மனநிலை இல்லாமல் இருக்கலாம் அல்லது பின்பு பேசிக்கொள்ளலாம் என இருக்கும்,
எல்லாருக்கும் ஒரே சூழ்நிலை ,ஒரே மனநிலை எப்போதும் இருக்காது அல்லவா!!!
ஆனால் ஒருவர் அழைத்தால் திருப்பி அழைப்பது ஒரு அடிப்படை நாகரீகம், சிறந்த பழக்கமும் கூட,சரி வேலை,சூழ்நிலை ஓகே ஆனால் ஒரு கஷ்டம் (Custom) மெஸ்ஸேஜ் ( I Will Call You Back Later) செய்யலாமே,அதற்கு 5 நொடி கூட ஆகாது அல்லது ஹெலோ நான் வேலையா இருக்கேன் அப்புறம் கூப்பிட்றேன்னு சொல்லலாம்.சரி இதுவும் முடியல வேலை எல்லாம் முடிந்து இரவு அல்லது இரண்டு நாள் கழித்து கூட கால் செய்து ஒரு மன்னிப்பு கேட்டு பேச தொடங்கலாம்.
சாதாரணமாகவே மனித நம் உள்ளுக்குள் ஆயிரம் கதை எழுதும் "ஒரு வேளை நம்மை புறக்கணிக்கிறார்களோ,போன முறை பேசும்போது நாம் நகைச்சுவையாக சொன்னது அவருக்கு காயப்பட்டிருக்குமோ,என்னை பிடிக்க வில்லையோ" போன்றவைகள்.
ஆனால் எதிரில் இருப்பவரோ எதுவுமே ஆகாதது போல நேரில் சந்திக்கும்போது "வா எப்படி இருக்கனு" கேப்பாங்க.ஆனால், நம் மனதில் உள்ள வடு அவ்வளவு எளிதில் சகஜமாக பேச விடாது,அவர்களுக்கும் ஒரு குற்ற உணர்ச்சியே இருக்காது ஏன் நியாபகம் இருக்கானு கூட தெரியாது.
அட என்னப்பா பா கால் எடுக்காதது ஒரு விடயமான்னு கேட்டா ஆமா முக்கியமான விடயம் தானே!!
இதுபோன்ற சிறு காரணங்களால் தான் உறவில் பெரிய பிளவு உண்டாகும்!!
இதை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை,தட்டி விடுவோம்,வந்தா வரட்டும்,பேசுனா பேசட்டும்,நாம் அவர்களை கேள்வி எதுவும் கேட்க தேவையில்லை ,இதே கதை அவருக்கும் நடந்தால் புரியும்!!
உதாரணமாக VIP (வேலை இல்லா பட்டதாரி) படத்தில் தனுஷிற்கும் அவர் அம்மாவிற்கும் சண்டை என கால் எடுக்காமல் நேரில் போய் பேசிக்கலாம் என அலட்சியமாக இருந்ததினால் ஒரு உயிரே போனது!! (படத்தில்)😛
நானும் சில நேரத்தில் பேசும் மனநிலையில் இல்லாமல் புறக்கணித்தும் அல்லது தாமதமாக பேசியும் உள்ளேன்,உள்ளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கும், நாம் செய்வது தவறு எனும்போது திருத்திக்கொள்ள முயன்றேன்,முயல்கிறேன்.
அழைப்பிற்கு பதில் கொடுக்க முயற்சிப்போமே !!
தேடி வந்த டேக் கேர்,விலகி போனா டோன்ட் கேர் !!
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️