சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?
இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும் காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை.
பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க.
இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம்.
சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்".
யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது".
அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 மாதம் அளவிற்கு வைப்பு இருக்கட்டும்,நீண்ட கால முதலீடு நல்ல வட்டி விகிதம் இருக்கும் முதலீட்டில் மாதம் குறைந்த பட்சம் 1000 ரூபாயாவது செய்யுங்கள்.
மாதம் வெளியில் உணவு சாப்பிடுவதோ,படம் பார்க்கிற செலவோ தான் இந்த குறைந்தபட்ச பணமான 1000 ரூபாய்.
அதிகமாக சம்பாதித்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியாது,
பணக்காரர் ஆகிய அனைவரும் சேமிப்பும்,முதலீடும்,வருவுக்குள் செலவு என்பதை தான் பின்பற்றினர்.
சேமிப்பு முக்கியம் பிகிலு!!
சேமிப்பும்,முதலீடும் இல்லையென்றால் வாழ்க்கை முழுக்க வேலை செய்ய வேண்டும்!!
அதற்கு தயார் என்றால் தாராளமாக செலவு செய்யுங்கள்..
இதற்கு பதில் உங்களிடம் தான் உள்ளது!!!!
யோசிப்போம்!!!
நன்றி❤️
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️