சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
எங்கு எந்த உரையாடல் கேட்டாலும் சரி,சமூக வலைதளத்தில் பார்த்தாலும் சரி "ஐயோ ஒரே போர் அடிக்குது" " என்ன பண்றதுனே தெரியல,எவ்ளோ நேரம் தான் தூங்குறது"னு புலம்பல்கள் தான் அதிகம்.
புலம்புபவர்கள் யாரென்று பார்த்தால் வாழ்க்கையை/குடும்பத்தை எப்படி ஓட்டுவது என்ற பொறுப்பு/கடமை இல்லாதவர்களின் புலம்பல்கள் தான் இவையெல்லாம்.
சரி அது இருக்கட்டும் நேரம் ஏன் பொறுமையாக செல்கிறது?
இவ்வளவு காலம் வேலைக்கு செல்வது,ஊர் சுற்றுவது,பயணம் செய்வது ,உறக்கம்,குடும்பம்னு ஏதோ செய்து கொண்டே இருந்தோம்,இப்போ இவை ஏதும் பெரிதாக இல்லை,வீட்டிலே இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை!
மகளிருக்கு மட்டும் இதில் விதிவிலக்கு எந்நேரமும் குழந்தை, கணவன் ,சமையல் என இருப்பதால் அவர்களுக்கு இது புதிதல்ல.
இலக்கு இருக்கும் மனிதன் பெரும்பாலும் இது போன்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்த மாட்டான் ,ஏனேன்றால் தன் இலக்கை நோக்கி செல்ல என்னெவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கான நேரமாய் பயன்படுத்திக் கொள்வார்கள்.ஒவ்வொரு நாளும் உருப்படியாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
சரி என்ன செய்யலாம்?
அறையை சுத்தம் செய்யலாம்,புதிய விடயத்தை கற்றுக் கொள்ளலாம்,புத்தகம் படிக்கலாம்,நண்பர்கள்,உறவினர்களுடன் பேசலாம், நிதி மேலாண்மை,சேமிப்பி,முதலீடு பற்றி கற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கைக்கு ஏதாவது உதவும் செயலை தினசரி செய்தால் நம் வாழ்வு மெருகேறுவதை காணலாம்.
அதை விட்டுவிட்டு இன்ஸ்டா,முகப்புத்தகம், சீரீஸ்,டக் டாக்,கேம்ஸ் என கண்டவற்றிலும் உங்கள் நேரம் போனால் ஒன்றும் ஆகாது.
நீங்கள் வீணடிப்பது நேரத்தை மட்டுமல்ல உங்கள் எதிர்காலத்தை!!
நீங்கள் எதை அதிகம் பார்கிறீர்களோ,கேட்கிறீர்களா ,நுகர்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள் என்பது நினைவிருக்கட்டும்
தினமும் சுய மேம்பாட்டிற்காக குறைந்தபட்சம் 1 மணி நேரம் ஒதுக்குங்கள்.
அடுத்த பதிவில் லாக் டவுனில் என்னவெல்லாம் செய்து நாம் நம்மை productuve ஆக வைத்திருக்கலாம் என்பதை பதிவிடுகிறேன்.
நன்றி♥️
Super
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு