முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

EMIயில் பொருட்கள் வாங்கலாமா? இவர்கள் செய்யும் டுபாக்கூர் தனங்கள் என்ன? #emi

நான் பொதுவாகவே என்ன சவால்கள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கடன் வாங்க மாட்டேன்.ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நன்றாக தெரிந்த நண்பர்களிடம் வாங்கினால் சில நாட்கள் அல்லது வாரத்தில் சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன்.

AC வாங்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில் முழு பணம் இல்லை அப்படி இருந்தாலும் முழு பணத்தை அதில் போட்டால் லாக் ஆகி விடுவேன்.சரி zero cost EMIனு இருக்கே முயற்சி பண்ணுவோம்னு முயற்சித்தேன்.ஏற்கனவே தெரியும் Bajaj கார்டு வாங்கினால் கார்டுக்கு ஒரு பணம் processingக்கு பணம்னு. எல்லாம் தெரிஞ்சி வாங்கிவிட்டோம்.

ஆரம்பத்தில் டவுன் பேமெண்ட் கட்டி விட்டேன், எங்களுக்கு ஆட்டோ டெபிட் ஆப்ஷன் வேண்டாம் வேறு வங்கியில் இருந்து கட்டி விடுவோம் என்று சொல்லிவிட்டோம்.ஆனால் அடுத்த மாதம் என் வங்கியில் இருந்து கட்டினேன் auto debit செய்யும்போது அதில் பணம் இல்லையென ஒரு பெனால்டி ,எப்போதுமே முதல் மாதம் கூடுதலாக 200 ரூபாய் புடிப்பார்களாம் அதை கடைக்காரர்கள் சொல்லவில்லை.


இன்னொரு திருட்டு தனம் என்னவென்றால் அதில் தானாகவே அவர்கள் பக்கத்தில் இருந்து insurance இணைந்து கொள்கிறார்கள் ஆக கூடுதலாக 300 ரூபாய் சேர்ந்து கொண்டே இருந்ததால் EMI எடுத்த நிறுவனத்திற்கு அழைத்தால் Customer Support கேவலமாக இருந்தது ஒரு முறை அழைப்பில் பேச முடியவில்லை.சரி என  கடையில் சென்று கேட்டால், இது அவங்க சைடுல பண்ணிடுவங்க பா உங்க கிட்ட மொபைல் இருக்கு பார்த்தீங்க நிறைய பேரு குட்டி போன் வச்சிக்கிட்டு என்னென்ன தெரியாம கட்டிடுவாங்க பாவம்னு சொல்றாப்ல.பின்பு ஆப்பில் அதை கேன்சல் செய்து கொடுத்தார்கள்.

என்னடா இப்படி பண்றாங்க ஏண்டா வாங்கினோம்னு ஆகிடுச்சு,இவங்க செய்யுற அட்டூழியத்தில் நிம்மதியாக தூங்க AC வாங்கினால் அதில் துளியும் நிம்மதி இல்லை.சரி எப்படியாவது கட்டி இதை ஒழித்துவிடுவோம் என கோபத்தோடு பஜாஜ் சென்றால் அங்கு ஒரு தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து சார் இந்த இது இதுக்கு எடுத்திருக்கங்கஸ்அது மவ்
மெயின்டெனன்ஸ் இது எப்போதும் அப்பப்போ எடுப்பார்கள் இதை கடைக்காரர்கள் உங்க கிட்ட சொல்லவில்லையா என சொல்லி,என் த்ரிப்திக்கு திரும்ப திரும்ப டவுட் கேட்டு எல்லாத்துக்கும் பதில் சொல்லி வாயை அடித்தார்கள் அட போங்கடா என்ன எழவோ கட்டுவிடுவோம் என்ற நிலை வந்துவிட்டேன்.


உங்களுக்கு ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் முடிந்தளவு சேமித்து வாங்குங்கள், முடியாத பட்சத்தில் கடைசியில் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் வாங்கி சில காலத்தில் கொடுத்து விடுங்கள்.தயவு இது போன்று EMI என்று பண்ணும் டுபாக்கூர் கம்பெனிகளிடம் சிக்க வேண்டாம்.ஆனால் நடுத்தர குடும்பத்தினர் பலருக்கு இப்படி செய்தால் தான் வீட்டிற்கு ஒவ்வொரு பொருளாக வாங்க முடியும்.அப்படி வாங்கும் பட்சத்தில் Debit/Credit ஆஃபர் இருந்தால் உபயோகித்து கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் EMI என்றால் அனைத்தையும் தெளிவாக கேட்டு நல்ல கம்பெனியாகி பார்த்து வாங்குங்கள் இல்லையெனில் அவர்களில் சரகிற்கு நாம தான் சைட்டிஷ்...!

✍️ அசோக் குமார் சுதர்சனம்




#EMI #emiscam #ZeroCostEMI #tamilblogger #tamil #BajajFinserv #bajajscam

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...