சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
நாம் எல்லாம் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மைதாவை உண்போம், யாராவது கேட்டால் "ஒரு நாள் தானே என்ன ஆகப் போகுதுன்னு சொல்வோம்" முக்கியமாக குழந்தைகளுக்கு பிரெட் ,பண் போன்றவை கொடுப்பதை தவிர்க்கலாம், பெரியவர்களுக்கும் தான்...! இதனால் ஏற்படும் பின்விளைவுகள் இப்பொழுது தெரியாது பின்புதான் தெரியவரும். ஆனால், இதனால் தான் வருகிறது என சொல்லவும் முடியாது , ஓரு குழந்தையை ஒழுக்கத்துடன் வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமை அல்ல எது நல்ல உணவு எது உடலுக்கு தீமையான உணவு என சொல்லி ஒரு நல்ல உணவுப்பழக்கத்தை உருவாக்கி கொடுப்பதும் நம் கடமை தான். குறைந்தபச்சம் 5 வயது வரையாவது தவிருங்கள் பிறகு பழகிவிடும். பெரியவர்களும் குழந்தைகள் தான் அவர்களுக்கும் இந்த பிரெட்,பண் எல்லாம் எளிதில் ஜீரணம் ஆகாது அதற்கு ஒரு இட்லி , பால் குடித்துவிட்டு படுக்கலாம். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் மைதா ராஜ்ஜியம் தான் ஒரு ஏரியாக்கு ரெண்டு பேக்கரி , பிஸ்கட், பிரெட்,பண், பிஸ்சா ,எல்லாமே!!!! இதற்கு பதில் ஆர்கானிக் பிஸ்கட்ஸ் விற்கிறது கம்பு,கேழ்வரகு போன்ற Glycemic Index குறைவாக உள்ள பொருட்களில் செய்யப்படுகிறது மைதாவிற்கு இத...