சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
நடிகர் விவேக்கின் மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரின் இறப்பை!!!
அப்துல் கலாம் ஐயாவின் ஆசிப்பெற்ற ஆளுமை மனிதர் விவேக்,வாழ்ந்தவரை யார் வெறுப்பையும் சம்பாதிக்காமல் பலரின் அன்பை மட்டுமே பெற்று சென்றுள்ளார் என நினைக்கிறேன்,திரை வாழ்விலும் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது,அவரின் நகைச்சுவையை சிறுவயதில் பார்த்தால் நகைச்சுவையாக மட்டுமே தெரியும், போக போகத்தான் அதில் உள்ள கருத்துகளும், அர்த்தங்களும் புரிய துவங்கும்,சிந்தக்க தூண்டும்.
மதுரையில் பிறந்து பள்ளிப்படிப்பு,கல்லூரியை முடித்து, டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை யைத் துவங்கி, சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் துவங்கி சினிமாவில் முடிந்தது அவர் வாழ்க்கை.
திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்கு இந்திய அரசு அவருக்கு மிகவும் உயரிய விருதான "பத்ம ஸ்ரீ" விருது கொடுத்து கௌரவித்தது.
அப்துல் கலாம் ஐயாவின் ஆசையை முழு மூச்சாக செயல் படுத்தி வந்தார்,அந்த ஆசை ஒரு கோடி மரங்களை விதைப்பது, விவேக் அவர்கள் லட்சக்கணக்கான மரங்களை விதைத்து இப்பூமியை பசுமை ஆக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இன்னும் முழுமை அடையவில்லை,அவர் விட்டு சென்ற பணியை உயிர் வாழும் நாம் தான் செய்ய வேண்டும்.
அது மரங்களை நடுவது,இரங்கல் தெரிவித்து ஸ்டேட்டஸ் போட்டு,முகப்புத்தகத்தில் பதிவு போட்டால் மட்டும் போதாது,மரங்களை நட வேண்டும், அதை விட முக்கியமான விடயம் பராமரிக்க வேண்டும்.
அவரின் வாழ்விலும் அவ்வளவு வலியும் வேதனையும் இருக்கவே செயத்தது, அவரும் மனிதன் தானே!!
அவர் தாயின் இறப்பு, தன் மகனின் இறப்பு அவரை அனுதினமும் வாட்டி வதைத்தது, அதை பல நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போது அவரின் மனைவி ,மகள் சோகக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
"நல்லா இருந்த மனுஷன் திடீர்னு போயிட்டாருனு சொல்லி கேள்விப்பட்டிருப்போம்"
உயிரோடு இருக்கும் போதே கோபம்,ஈகோவெல்லாம் தூக்கி வீசி அன்பை விதைப்போம்,இறந்த பின்பு அழுது,புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. யாருடனாவாது கோபம் இருந்தால் நீங்களே சென்று பேசுங்கள்,தவறில்லை.நிச்சயமில்லாத வாழ்க்கை, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல்,நல்லதை விதைத்து செல்லுங்கள், நீங்கள் மறைந்த பின்பும் வாழ்வீர்கள்.
தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு வந்ததா என தெரியவில்லை, தனிப்பட்ட முறையில் இந்த vaccine மேல் நம்பிக்கை இல்லை,அவரவர்களின் விருப்பம்,சூதனமா இருந்துகொங்க,இன்னும் பலரை இழக்க வேண்டாம்.
அவரின் வசனத்தோடு முடிப்போம் "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்".
இவரின் வாழ்க்கை சிறந்த உதாரணம்,நம் வாழ்வின் வெற்றிக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️