முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

தரமான பொருள் வாங்குவது எப்படி? Realme Wireless Bluetooth Headphone விமர்சனம்!!!

நேற்று குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் பற்றியும் உடன் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு தரமான பொருளை வாங்கலாம் என்பதை பற்றி பதிவிட்டிருந்தேன், அப்பதிவை படிக்க கீழ உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்👇🏻>.

https://ashokkumarsudarsanam.blogspot.com/2021/04/blog-post.html

நான் எப்போதுமே ஒரு பொருளை வாங்கும் முன்பு எனக்கு இப்போ இது  அவசியம் தானா? நல்ல பிராண்ட்டா? விமர்சனம் எப்படி இருக்கு? நிறைய வசதிகள் இருந்தாலும் எனக்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பதை பார்ப்பது வாடிக்கை அதுமட்டுமில்லாமல் டெக்கிஸ்களிடம் (Techies) ஆலோசனை கேட்பதும் தான்.

● ஹெட்போன் Realme(1,800),Oneplus (2,000)

Oneplus ஹெட்போன் நண்பனிடம் இருந்து வாங்கி உபயோகப்படுத்தினேன் நல்லா தான் இருந்தது ஆனா ரொம்ப bass இல்லாம நார்மலா டீசென்டடா இருந்துச்சு, ஆஃபீஸ் ஒர்க்குக்குலாம் இது ஓகே பட் மியூசிக் லவ்வர்ஸ் இல்ல நிறைய பயணம் செய்கிறவர்களுக்கு  இது செட் ஆகாது!!

சரி realme wireless bluetooth headphone வாங்கலாம்னு முடிவு பண்ணேன்,Mi, Boatலாம் நிறைய பார்த்தேன் ஆனால் அனைத்தையும் விட இந்த விலைக்கு இது சரியாக இருக்கும் என தோன்றியது.

ஒரு ஹெட்போன்க்கு 1,800ரூ கொடுத்து வாங்குனுமானு உள்ளுக்குள்ள கேள்வி இருந்துச்சு.ஆனால் எனக்கு இது தேவை என்பதை விட அவசியமாக இருந்தது.

சில நாள் காத்திருந்து  தள்ளுபடியில் 1800ல் இருந்து 1,500க்கு வந்தது  *த்தா தாம்பரத்துல இறக்குடா (ஆர்டர போட்றா) போட்டாச்சு!!
300 ரூபாய் மிச்சம்,12 மாசம் வாரண்ட்டி இருக்கு இதுக்கு மேல என்ன வேணும்!!

கொஞ்சம் review மாதிரி பார்க்கலாமே!

Magnetic Connection
ஏதாவது பாட்டு கேக்குறோம்,திடீர்னு பாஸ் பண்ணணும்னா இரண்டையும் காதில் இருந்து எடுத்து விட்டால் போதும் முனையில் காந்தம் இருப்பதால் ஒட்டிக் கொள்ளும்,பாஸ்(Pause) ஆகிவிடும்.

  ★ 11.2 MM Bass Driver Boost
சவுண்ட் தரம் வேற லெவல்,அதுவும் பாட்டு கேக்கும்போதும் படம் பாக்கும்போதும்  சிறப்பாக இருக்கு,பாதி சத்தம் வைத்தாலே போதும்👌.

Bluetooth 5.0
ஹாலில் மொபைல் வைத்துவிட்டு ரூமில் கால் பேசலாம் அந்த அளவுக்கு connectivity பக்கா.

Sweatproof IP × 4
வியர்வை,தண்ணீர் பட்டாலும் ஒன்றும் ஆகாது,இதுவும் டெஸ்டெட்.

Flexible Necklace
கழுத்தில் இருப்பதே தெரியாது,24 மணிநேரம் இருந்தாலும் இருக்கிற பீலே இருக்காது,என்னையெல்லாம்  இது என்னடா உன் தாலியா கழட்டவே மாட்டியானு கேட்டவங்க பல பேர்,இரவு தூங்கும்போது மட்டும் கழட்டுவேன்🤣.

12 Hrs Playback
முழுவதும் சார்ஜ் ஏற ஒரு 1 மணிநேரம் முதல் 1.15 மணிவரை ஆகிறது, ஆனால் சார்ஜ் நின்னு பேசும் எனக்கெல்லாம் 1 நாளைக்கு மேல வருது தொடர்ச்சியாக யூஸ் பண்ணா நிச்சயம் 1 நாள் முழுவதும் வரும்👌

மொத்தம் மூணு நிறம்

மஞ்சம் கருப்பு -நல்லா இருக்கு பட் அழுக்காக நிறைய வாய்ப்பு அதிகம்

ஆரஞ்சு - ஓகே பட் கலர் ரொம்ப அடிக்குது

பச்சை - பக்கவா ஒரு clasic லுக் இருக்கு

எது பிடிக்கிதோ அதை வாங்கிகொங்க,
வேற என்ன சொல்ல கடந்த 3 மாதங்களாக இதை உபயோகித்து வருகிறேன்,கொடுத்த காசுக்கு ஓர்த்,செம பீல்,என்னடா 1500 கொடுத்து வாங்கினோம்னு ஒரு முறை கூட யோசிக்கவே இல்ல,ஏன்னா பொருள் தரம்.

500ரூ கொடுத்து SECOND COPY இதே போல் வாங்கினால் உடனடி மகிழ்ச்சி (Instant Gratification) கிடைக்கும் ஆனால் நிலைக்காது, ஏதாச்சும் பொருள் வாங்கணும்னா உடனே வாங்காம யோசிச்சி, நிதானமாக வாங்குங்க ஏன்னா பின்னால வருப்பட கூடாது,இதை வாங்கினதுக்கு சந்தோஷம் தான் படனும்!

பொருட்கள் குப்பைகள் அல்ல,நமக்கு தேவையான பொருட்கள் நம் வாழ்வில் நம் வேலையை சுலபமாக்குவதாக இருக்கட்டும்!!

இந்த ஹெட்போன் நீங்க வாங்கணும்னா கீழ லிங்க் கொடுக்கிறேன் வாங்கிகொங்க!!

https://www.amazon.in/dp/B081BCWRGX/ref=cm_sw_r_wa_apa_glc_fabc_4EY0HT02V7QQR5HNK4WW?psc=1

நன்றி!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...