சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
சாதிக்க துடிக்கும் பலரின் வாழ்வைப் பற்றி சில வரிகள்!!!
இவர்களுக்கு தீராத வெறி சாதிக்க வேண்டும், நாம் நினைத்த வெற்றியை அடைய வேண்டும், உலகமே திரும்பி பார்க்கும் அளவுற்கு சாதிக்க வேண்டும் .நான் வீழ்வேன் என்று நினைத்த உறவினர்கள் மற்றும் சமூகத்துக்கு முன் எழுந்து நின்று வாழ வேண்டும் என இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்,இவர்களின் இலக்கு தெளிவாக உள்ளது,அதற்காக தான் அனுநொடியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்....!
ஆனால் .............
வெறி இருக்கும் அளவுற்கு இவர்களிடம் பணம் இல்லை ல்.ஆம் ,தேவையான பொருட்கள் வாங்க ,மருத்துவ செலவு, 3 வேலை சரியான உணவு உண்ண,பயணம் செய்ய என பல காரணிகள் உண்டு பலர் திறமை இருந்தும் பணம் என்னும் மதிப்புமிக்க காகிதம் இல்லாததால் அவர்கள் இலக்கை எட்ட முடியாமல் போய் விடுகிறது!
இதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!!
உன்னை வழிநடத்த , உனக்கு உதவி செய்ய,உனக்கு தோள் கொடுத்து தூக்கி விட யாராவது வருவார்கள் என எதிர்பார்க்காதே இது அவசியம் இல்லாதது,உனக்கு நீ மட்டுமே ஆசான்,
உன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இரு மேலே குறிப்பிட்டவை எல்லாம் தானாக உன்னிடம் வரும், நீ நினைத்த இலக்கு உன் அருகில் தான் உள்ளது அதை நீ விரைவில் அடையப்போகிறாய்.
1.தன்னம்பிக்கை
2.விடாமுயற்சி
3.கடின உழைப்பு
இது மூன்றும் எப்போதும் உன்னுள் தீயாய் எரிந்துகொண்டே இருக்கட்டும் ,
நீ சாதிக்க பிறந்தவன்,சரித்திரம் படைக்க ப் பிறந்தவன்,உன்னால் முடியும்!
இதில் இவர்கள் என குறிப்பிட்டவர்கள் எல்லாம் நீங்கள் தான்,ஆம் இதை வாசிக்கும் நீங்கள் தான், சாதிக்க ஏது வயது, நீங்கள் நினைத்த இலக்கை அடைய இப்போதும் நேரம் உள்ளது இன்றே துவங்குங்கள் உங்கள் வெற்றி பயணத்தை!
எண்ணம் போல் வாழ்க்கை!!
கருத்துகள்
கருத்துரையிடுக
அன்பும் நன்றியும்♥️