சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள். நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள். மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...
எனக்கு ப்ளூடூத் ஹெட்போன் அவசியமாக இருந்தது,நிறைய அழைப்புகள், அதுமட்டுமில்லாமல் podcast ,பாடல்கள் ,புத்தகங்கள் பற்றி கேட்பது என எப்போதும் உபயோகமாக இருக்கும்.
Realme Wiress Earphone மேல் ஒரு ஆசை பார்த்தால் விலை 1,800 ஓவா சரி பொறுமையா வாங்கிக்கலாம்னு இருந்தேன் ,நண்பர் ஒருவர் "நான் பாரிஸ்ல தான் இந்த ஹெட்போன் வாங்கினேன் 400 ரூபாய் தான்னு சொன்னார்,யூஸ் பண்ணி பார்த்தேன் நல்லா தான் இருந்துச்சு ஒரிஜினல் மாதிரி. சரி நானும் வாங்கலாம்னு மெனக்கெட்டு பாரிஸ் வரைக்கும் போய்ட்டு பேரம் பேசி வாங்கிட்டு வந்தேன் 800ரூ சொன்னாங்க 600 ரூபாய்க்கு வாங்கினேன்.
ஒரிஜினல் மாதிரி பேக்கிங் (உள்ளுக்குள் 600 ரூபாய்க்கு எப்படின்னு ஒரிஜினல்னு கேள்வி இருந்தாலும் 600 ரூபாய்க்கு ஓகேனு வந்தாச்சு) 1 வருஷம் வாரண்டினு சொன்னாங்க.
ஓரு 1 வாரம் நல்லா இருந்தது அப்போ கூட சரியா கனெக்ட் ஆகவில்லை,சவுண்ட் சரியாக இல்லை,சார்ஜ் நிக்கல அண்ட் ஒரு சைட் சுத்தமா ஒர்க் ஆகாம போச்சு,ஒரு பக்கம் அறுந்து தொங்கிடிச்சு, சரினு கடைக்காரருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டா ,கடை அட்ரஸ் கூட தெரியல எப்படி என்கிட்ட வாங்குனிங்கனு கேக்குறாப்ல.
அங்க ஒரு 50,100 கடை ஒரே மாதிரி இருக்கும்,சரி நேரா போவோம்னு முடிவு செஞ்சி கிளம்பினேன், பயணம் ஒரு மணிநேரம், தேடி அளஞ்சி கடைய கண்டுபிடிக்க ஒரு அரை மணிநேரம்,ஓனர் வர ஒரு அரை மணிநேரம்,சரி நமக்கு வேற குடுத்துடுவாஞனு ஆசையோடு போய்ட்டு கேட்டா,
"600 ரூபாய்க்கு வாங்கிட்டு எப்படி வாரண்ட்டி கேக்குறீங்க,முடியாதுன்னு திமிரா பேச,நானும் அப்புறம் எதுக்கு இந்த ஏமாத்து வேலை,நல்லா நாலு கேள்விய கேட்டு வர,அவருக்கு சுத்தமா சொரனையே இல்ல,ரொம்ப கேவலமான நடவடிக்கை,வேணும்னா என் கடைக்கு வராதீங்கனு வேற திமிர்ரா பேசுராறு,
அன்னைக்கு வேற வேலை இருந்துச்சு போகணும் இல்லைனா கிழி கிழினு கிழிச்சிருக்கலாம்,
மொத்ததுல நேரமும்,பணமும் தான் வீண்!!
இதே போல ஸ்மார்ட் வாட்ச்,ப்ளூடூத் ஸ்பீக்கர்னு,டி ஷர்ட்,ஷூஸ்னு நிறைய ஒரிஜினல் மாதிரியே வருது, சில கடைல இதை செகண்ட் காப்பினு சொல்லியே கொடுப்பாங்க,இதுபோன்ற திருட்டு கடை,வாட்சப்களில் விற்கும் நபர்கள் 2,000 பொருளை 400 ரூபாய்க்கு இருக்குனு சொல்லுவாங்க இருக்கு உண்மை தான்.ஆனா ஒரிஜினல் இல்ல,கொஞ்ச நாளில் டமால் ஆகிடும் யாரையும் ஒன்னும் கேக்க முடியாது.
பாரிஸ் போன்ற உலக டுபாக்கூர் கடைகளில் இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டாம், வேற காசே இல்லைனா ஆனா அந்த பொருள் வேணும்னா அதே மாடலில் சின்ன சின்ன பிராண்ட் பொருட்களும் வாரண்ட்டியுடன் கிடைக்கும்.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
இல்ல கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி,எக்ஸ்ட்ரா பைசா போட்டு ஒரிஜினல் வாங்குங்க வித் பில்லோட. Festival time offerல் வாங்கினால் இன்னும் தள்ளுபடி இருக்கும். தரமான பொருள்,ரொம்ப நாள் வரும்,அது கொடுக்கிற பீல் வேற.....!
அட "மாவுக்கு ஏத்தா பணியாரம் தாங்க"
கடின உழைப்புக்கு பின் வரும் பணத்தை,கடினமாக உழைக்கும் பொருளுக்கு செலவிடுவோம்!!
உங்களுக்கு இதுபோன்ற அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்,
இதுபோன்ற டுபாக்கூர்களிடம் ஏமாறாலம் இருக்க இப்பதிவை பகிரவும்...!
Nice 👌 👏
பதிலளிநீக்குநன்றி
நீக்கு//அன்னைக்கு வேற வேலை இருந்துச்சு போகணும் இல்லைனா கிழி கிழினு கிழிச்சிருக்கலாம்//
பதிலளிநீக்குஆத்தீ
😂😅
நீக்குVery well written Ashok, content with humour 👍
பதிலளிநீக்குநன்றி சகோதரா!!♥️
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு