முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

Club House பரிதாபங்கள் - படிக்க வேண்டிய பதிவு!!!!

Club house எனும் செயலி சமீபத்தில் ட்ரெண்டில் இருப்பது,மற்ற சமூக வலைதளங்கள் போல இதுவும் ஒன்று,என்ன? இதில் வெறும் ஆடியோ வடிவில் மட்டுமே பேச முடியும்,இப்போது மெஸ்ஸேஜ் செய்யும் வசதியும் கொண்டு வந்துள்ளனர். இவைப்பற்றி கேள்விப் பட்டும் தள்ளியே இருந்தேன்,சரி என்ன தான் இருக்குனு உள்ளே சென்றேன். ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனால் போகப் போக புரிந்தது. பலருக்கு இப்போது இதுவே பொழுது போக்காக இருப்பது தெரிடவந்தது. என் நண்பர்கள் சிலரும் ஒரு ரூமில் இணைந்து பாட்டு கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்வதினால் மனஅழுத்தம் குறைவது போல் ஒர் உணர்வு என பகிர்கின்றனர். நிறைய தலைப்புகள்,புதிய மனிதர்கள்,நிறைய பொழுபோக்கு ,சிறிதளவு கற்றல் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. எனக்கு சேமிப்பு,முதலீடு,இலக்கு பற்றி சில கிளப்பில் இணைந்தேன்,பின்பு தெரியாமல் ஏதோ ஒரு ரூமில் இணைந்துவிட்டேன் யாரோ ஒருவர் ஒரு பெண்ணை ஆடை அணிந்தது  பற்றி சொல்லி விட்டு ஓடி விட்டார் போல,அதன் பிறகு ஒரே கத்தல்,கதறல்,கோபம்,அழுகை அந்த இடமே ரத்த பூமியாக இருந்தது.பின்பு தான் தெரிந்தது எல்லா ரூமில் இதே போன்ற ஏதாவது கொளாறு செய்...

ஹெல்மெட் அணிவதில் ஏன் அவ்வளவு சோம்பேறித்தனம்? விபத்து - விழிப்புணர்வு பதிவு

நேற்று அடையாரில் இருந்து வரும்போது வேளச்சேரி மேம்பாலத்தில் ஒரே போக்குவரத்து நெரிசல், ரைட்டு ஏதோ சம்பவம் ஆகி இருக்குன்னு கிட்ட போய்ட்டு பார்த்தா, சம்பவமே தான். முதியவர் வண்டி ஓட்டிகொண்டே பின்னால் பார்க்காமல் indicator போடாமல் ,சமிக்கை எதுவும் காட்டாமல் இடது பக்கம் திரும்பியுள்ளார்,வண்டியில் வேகமாக வந்த வாலிபர் இடித்ததில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர், இளைஞனுக்கு முகம்,கை காலலேலாம் பலத்த அடி அவர்க்கு அவரச ஊர்தியில் முதலுதவி செய்தார்கள்,பின் மருத்துவமனை சென்றார்கள். பெரியவருக்கு கை,கால்,முட்டி,பின் மண்டையில் தோல் பிரிந்து சதை தெரியும் அளவுக்கு அடி, சிறிது நேரம் சுய நினைவே இல்லை பிறகு பேசினார்.ஆனால் விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் நேரம் எடுத்தது.வண்டியில் வந்த 108ல் முதலுதவி செய்தார்கள்.பின் அவர் வீட்டிற்கு அழைத்து ஆள் வந்தவுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பினோம்.போகும்போது ஐயா ஒன்னும் இல்ல,சரி ஆகிடும் சொன்னேன்.ஆறுதலான வார்த்தை தான் அப்போது தேவை. அவ்வளவு பேர் நின்று உதவி செய்து வழி அனுப்பியது மனிதம் உயிரோடு இருப்பதை உணர்த்தியது.ஒரு சகோதரியும் கடைசி வரை...

மேதகு - ஒரு சிறிய விமர்சனம்

தமிழனத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இளமைப் பருவ வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நெருக்கடிகள்,அரசியல் அழுத்தத்தைக் கடந்து மாபெரும் வரலாறு வெளிவந்துள்ளது. இதுவரை தலைவர் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நாம் தலைவரை நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். ஏன் இலங்கை பிரிந்தது,ஏன் நம்மை ஆள துடித்தார்கள்,அடித்து நொறுக்கினார்கள் என்பதை தலைவர் "நாம் ஏன் திருப்பி அடிக்கயில்ல" எனும் கேள்வியில் அனைத்திற்கும் பதில் அடங்கியுள்ளது. அடங்கி ஓடியுங்கியது போதும் இனியும் எம்மக்கள் அடிமையாக இருக்க வேண்டாம் தமிழனை அடித்தால் திருப்பி அடி விழும்னு பயம் வரணும்னு தலைவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு கம்பீரம். தமிழ் ஈழ சொந்தங்களின் விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தி எடுக்கும் பிறமொழியாளர்கள் இருக்கும் இடத்தில் தற்போது இயக்குனர் கிட்டு அவர்கள் சமரசமில்லாத வரலாற்றை கொடுத்திருக்கிறார். உலகில் உள்ள அனைவரும் காண வேண்டிய படம் முக்கியமான எம் மக்களை கொச்சைப் படுத்தும் பிற மொழியாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எம் வரலாற்றை. குறைவான பண செலவு திர...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...

இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

உயிர் வாழ மூச்சுக் காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம் . இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும்  காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை. பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க. இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம். சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்". யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது". அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 ம...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

லாக்டவுனில் செய்ய வேண்டிய சிறந்த பழக்கங்கள் என்ன?

மறதி மனிதனின் இயல்ப  பலவற்றை படிப்பது மட்டுமல்லாமல் செயல் படுத்தினால் மட்டுமே வாழ்க்கை உயரும் நாமும் உயர்வோம். அனைவருக்கும் 24 மணிநேரம் தான் ,நேரம் இல்லை என கூறுபவர்கள் இதிலிருந்து தப்பிக்க கூறிகள் வழிகள் தான் இந்த வெட்டி வார்த்தைகள். நமக்கான நேரத்தை நாம் தான் ஒதுக்க வேண்டும். 1.உடற்பயிற்சி எந்தவித சாக்கு போக்கும் இல்லாமல் குறைந்தபட்சம் 20 நிமிடவாது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அது ஓட்டம்,ஆட்டம்,நடை எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும். இதனால் உடலும் சரியான எடையில் கச்சிதமாக இருக்கும்,மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும். 2.புத்தகம் வாசிப்பது இவ்வுலகில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பது அவர்களின் பழக்கம்,கற்றல் வாழ்க்கை முழுக்க இருந்து கொண்டே இருக்கும். புத்தகம் வாசிப்பதினால் புதிய விழியங்களை கற்றுக்கொள்ளலாம்,புத்தகம் நம்மை ஊக்குவிக்கும், புத்தகம் பல சிந்தனைகளை நமக்குள் கொண்டு வரும்,நமக்கென ஒரு உலகத்தை புத்தகத்தில் காணலாம். சற்று கடியான காரியம் தான் ஆனால் சரியான காரியங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் கசக்கவே செய்யும்,பிறகு இனிமும் முயற்...