முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

குழந்தைகள்களை பள்ளிக்கு கூட்டி செல்லும் பெற்றோர்களின் கவனத்திற்கு📍🔴| இதை பின்பற்றுங்கள்!!!

தினமும்  பிள்ளைகளை பள்ளியில் இறக்கி விடும் நண்பர்களே,அன்பர்களே!! என்னப்பா ஒரு ஸ்கூல்னு இல்லை ஊருக்குள்ள எங்க பார்த்தாலும் தான் பிள்ளையை இறக்கி விட்டுட்டு ஓடிட்டா போதும் டா சாமினு இருக்கீங்க போல.ஏன் அப்படி சொல்றேன்னா பின்னாடி ல்,முன்னாடி,இந்தப் பக்கம்,அந்தப் பக்கம்னு எந்த பக்கமும் பார்ப்பது இல்லை,வண்டி மட்டுமில்ல ஆட்டோ,கார்னு டர்று புர்ருன்னு இஷ்டதுக்கும் போறது.இதுல நீங்க பாதிக்கப்படறது இல்லை ஏன்னா நீங்க தான் யாரையும் பார்ப்பது இல்லையே. ஆனால் அவ்வழியே செல்லும் மக்கள் தான் உங்களையெல்லாம் என்ன செய்வது என்று மனதிற்குள் புலம்பி சிரமப்பட்டு செல்கின்றனர். தயவுசெய்து அவ்வழியே மற்றவர்களும் செல்ல வேண்டும் என உணர்ந்து அக்கம் பக்கம் பார்த்து நீங்களும் சுமுகமாக நின்று மற்றவர்களுக்கும் வழிவிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்♥️🙏 நன்றி வணக்கம்♥️😀😅 ✍️ அசோக் குமார் சுதர்சனம் #school #Traffic #akwrites

EMIயில் பொருட்கள் வாங்கலாமா? இவர்கள் செய்யும் டுபாக்கூர் தனங்கள் என்ன? #emi

நான் பொதுவாகவே என்ன சவால்கள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கடன் வாங்க மாட்டேன்.ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நன்றாக தெரிந்த நண்பர்களிடம் வாங்கினால் சில நாட்கள் அல்லது வாரத்தில் சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன். AC வாங்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில் முழு பணம் இல்லை அப்படி இருந்தாலும் முழு பணத்தை அதில் போட்டால் லாக் ஆகி விடுவேன்.சரி zero cost EMIனு இருக்கே முயற்சி பண்ணுவோம்னு முயற்சித்தேன்.ஏற்கனவே தெரியும் Bajaj கார்டு வாங்கினால் கார்டுக்கு ஒரு பணம் processingக்கு பணம்னு. எல்லாம் தெரிஞ்சி வாங்கிவிட்டோம். ஆரம்பத்தில் டவுன் பேமெண்ட் கட்டி விட்டேன், எங்களுக்கு ஆட்டோ டெபிட் ஆப்ஷன் வேண்டாம் வேறு வங்கியில் இருந்து கட்டி விடுவோம் என்று சொல்லிவிட்டோம்.ஆனால் அடுத்த மாதம் என் வங்கியில் இருந்து கட்டினேன் auto debit செய்யும்போது அதில் பணம் இல்லையென ஒரு பெனால்டி ,எப்போதுமே முதல் மாதம் கூடுதலாக 200 ரூபாய் புடிப்பார்களாம் அதை கடைக்காரர்கள் சொல்லவில்லை. இன்னொரு திருட்டு தனம் என்னவென்றால் அதில் தானாகவே அவர்கள் பக்கத்தில் இருந்து insurance இணைந...

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது | உயிராக இருந்தாலும் ,பொருளாக இருந்தாலும்!!!!

சில விடயங்கள் போனால் வராது,பொழுது போனால் கிடைக்காது!! அது ஒரு உறவாக,பொருளாக இருக்கலாம். பொருள் என்றால் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும்,அதை சரியாக சேவை(service) செய்யாமல் உபயோகப்படுத்திக்கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யும் அடுத்து வேலை செய்யாது அல்லது கவனமாக வைத்திருக்காமல் எங்காவது தவற விட்டுக்குடிப்போம்.  அடுத்து என்ன செய்வோம் "இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்,சோம்பேறித்தனம் பார்க்காமல் ஒழுங்கா சர்வீஸ் செய்திருக்கலாம்" என அழுது, புலம்ப வேண்டியது. ஒரு பொருளுக்கே இப்படினா நமக்கு பிடித்த,நம்மை பிடித்த,நமக்காக வாழும் உயிரை நாம் எப்படி அன்பை பகிர வேண்டும்,பார்த்துக்கொள்ள வேண்டும்,அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என உணர்த்த/உணர வேண்டும்.சின்ன சண்டை தான்  யார் மன்னிப்பு கேட்பது என தொடங்கி பெரிய விரிசலாகி விடும். அதோடு வாழ்வில் அதே உறவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.   ஒரு சின்ன சாரி தான் அதை கேட்பதற்கு நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு தான் கேட்க வேண்டும்...

தமிழ் படத்தில் ஏன் மற்ற மொழிகளை திணிக்கன்றனர்? இதெல்லாம் தேவையில்லாத வேலை!!!

இதை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் ஏனெனில் படத்தை படமாக ,பொழுதுபோக்கு போக்கை பொழுது போக்காக பார்ப்பது தானே நம் பழக்கம் ஆனால் நாம் அதிகம் விரும்பும் சினிமா,நாடகம்,குழந்தைகள் பார்க்கும் கார்டூன்ஸ் போன்றவற்றின் மூலம் தான் நம் மனதில் எதை திணிக்க நினைக்கிறார்களோ அதை சிறு வயது முதலே சிறப்பாக திட்டமிட்டு செய்கின்றனர். நம் தமிழ்நாட்டில்,நம் அக்கம் பக்கத்தில் மற்ற இனத்தினரும் ஒன்றாக தான் நண்பர்களாக வாழ்கிறோம்.ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏன் தமிழ் படத்திற்குள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என ஒரு குடும்பத்தை அறிமுகம் செய்து அதிலும் மேலே தமிழ் கூட டப் செய்யாமல் மற்ற மொழியிலையே பேசுகின்றனர். ஏன் கீழே ஆங்கிலத்தில் கூட என்ன பேசுகிறார்கள் என்பதை போடுவதில்லை. இதே போல் மற்ற மாநில திரையுலகில் செய்தால் படக்குழுவினருக்கு செருப்படி விழும். ஒரு படம் என்பது எந்த மொழியில் எந்த மாநிலத்தில் வெளியிடுகிறார்களோ அந்த மொழியில் முழுவதும் இருப்பது தானே சரி. என்ன கூற நினைக்கிறார்கள் என நினைத்தால் தமிழர்களை விட நாங்கள் அதிகம் வசிக்கிறோம்,நாங்கள் பெரும்பாண்மை,வீட்டில் மட்டும் எங்கள் தாய் மொழியை பேசிவிட்ட...

மறைந்த பின்பு அழுவதை விட வாழும்போது நேசியுங்கள் !!!

இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3  2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று  பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள். நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான். சில  சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வ...

பதிவு செய்த பேருந்து தாமதமானால் என்ன செய்யலாம்? | ஓட்டுனர்கள் வாழ்க்கை இப்படிப்பட்டதா?🙏♥️

வெளியூருக்கு செல்லும்போது நாம்  தனிப்பட்ட  இருசக்கர அல்லது மகிழுந்து உபயோகிப்போம், நெடுதூர பயணமென்றால் பெரும்பாலும் ரயில், அது கிடைக்காத பட்சத்தில் தனியார் அல்லது அரசு பேருந்து ல் இன்னும் சொகுசாக வேண்டுமெனில் தனியார் ஆம்னி பேருந்துகள் செமி ஸ்லீப்பர் அல்லது ஸ்லீப்பர் இன்னும் வசதியாக இருக்கும்.என்ன கொஞ்சம் பயணசீட்டின் விலை கொஞ்சம் அதிகம் (மாவுக்கேத்த பணியாரம் ) ஆனால் தலையானி, போர்வை,தொலைக்காட்சி(புதிய படம்),சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்,நிம்மதியாக உறங்கி நம் இடத்திற்கு சென்றடையலாம். ஆனால் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து நாம் கொஞ்ச நேரம் பயணித்தால் உள்ளே சென்று தூங்கவே மனம் வராது  அவ்வளவு பீதி. இப்பதிவு எதற்கென்றால் ,சில நேரம் நாம் பதிவு செய்த பேருந்து அல்லது மகிழுந்து எதுவானாலும் முக்கால்வாசி சரியான நேரத்திற்கு வந்துவிடும்.சில நேரம் நகரத்தில் வண்டி நகராமல் மணி நேரமாக ஊர்ந்து சென்று உங்கள் இடத்திற்கு வந்தடையும்.லைவ் ட்ராக்கிங் இருந்தால் அதில் பார்த்துக்கொள்ளலாம் இல்லையெனில் 10 முதல் 20 நிமிஷம் வரை காத்திருக்கலாம்.அதற்குள் 50 முறை அழைப்பு விடுத்தால் அவர்கள் நம் அழைப்...

என் 100 நாள் ஓட்ட சவாலின் போது ஓர் நாள் இரவில் ஏற்பட்ட சம்பவங்கள்,சவால்கள்!!!

58/ 100 Days of Running - HDOR |10k❤️🏃🏻‍♂️ இந்த  ஓட்டம் வாழ்வில் மறக்க முடியாதவை!! (27.06.2022) முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓட்டத்தை முடித்து விடுவேன்.ஏனெனில்,அன்று நெடுதூர ஓட்டம் அதுமட்டுமில்லாமல் காலை முடித்துவிட்டால் அதோடு செவ்வாய்க்கிழமை தான் ஓட்டம்,திங்கள்கிழமை ஓட்டம் இருக்காது ரெஸ்ட் டே.😍 உறவினர் வீட்டிற்கு வந்தேன்.காலை ஓடலாம் என திட்டம் வைத்திருந்தேன் ஆனால் அங்கே காலை ஏலகிரி மலைக்கு செல்லலாம் என சொல்ல.காலை பைக்கிள் சென்றோம், அங்கு @funderapark  வெவேறு நாட்டு பறவைகள், முயல்கள் அதுஇதுவேன்று பார்த்து முடித்துவிட்டு. பின்பு அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப,சென்று சேர மணி 8.30 ஆகி விட்டது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஓடலாம் என உள்ளுக்குள் தோன்றினாலும் , கொஞ்சம் படுத்துவிட்டால் அசதியில் உறங்கிவிடுவோம் என பிரெஷ் ஆகி ட்ரெட்மில்லை ஆன் செய்து ஓடத்துவங்கினால் அது சரியாக வேலை செய்யவில்லை. ஷப்பா🤧 ஏற்கனவே நாள் முழுக்க பயணம் 300k வண்டி ஓட்டி உடல் அசதி.சரினு வெளியே கிளம்பினேன் அங்கே எனக்கு அவ்வளவாக வழி தெரியாது கேட்டு கேட்ட...