முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

பதிவு செய்த பேருந்து தாமதமானால் என்ன செய்யலாம்? | ஓட்டுனர்கள் வாழ்க்கை இப்படிப்பட்டதா?🙏♥️

வெளியூருக்கு செல்லும்போது நாம்  தனிப்பட்ட  இருசக்கர அல்லது மகிழுந்து உபயோகிப்போம், நெடுதூர பயணமென்றால் பெரும்பாலும் ரயில், அது கிடைக்காத பட்சத்தில் தனியார் அல்லது அரசு பேருந்து ல் இன்னும் சொகுசாக வேண்டுமெனில் தனியார் ஆம்னி பேருந்துகள் செமி ஸ்லீப்பர் அல்லது ஸ்லீப்பர் இன்னும் வசதியாக இருக்கும்.என்ன கொஞ்சம் பயணசீட்டின் விலை கொஞ்சம் அதிகம் (மாவுக்கேத்த பணியாரம் ) ஆனால் தலையானி, போர்வை,தொலைக்காட்சி(புதிய படம்),சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்,நிம்மதியாக உறங்கி நம் இடத்திற்கு சென்றடையலாம். ஆனால் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து நாம் கொஞ்ச நேரம் பயணித்தால் உள்ளே சென்று தூங்கவே மனம் வராது  அவ்வளவு பீதி. இப்பதிவு எதற்கென்றால் ,சில நேரம் நாம் பதிவு செய்த பேருந்து அல்லது மகிழுந்து எதுவானாலும் முக்கால்வாசி சரியான நேரத்திற்கு வந்துவிடும்.சில நேரம் நகரத்தில் வண்டி நகராமல் மணி நேரமாக ஊர்ந்து சென்று உங்கள் இடத்திற்கு வந்தடையும்.லைவ் ட்ராக்கிங் இருந்தால் அதில் பார்த்துக்கொள்ளலாம் இல்லையெனில் 10 முதல் 20 நிமிஷம் வரை காத்திருக்கலாம்.அதற்குள் 50 முறை அழைப்பு விடுத்தால் அவர்கள் நம் அழைப்...

என் 100 நாள் ஓட்ட சவாலின் போது ஓர் நாள் இரவில் ஏற்பட்ட சம்பவங்கள்,சவால்கள்!!!

58/ 100 Days of Running - HDOR |10k❤️🏃🏻‍♂️ இந்த  ஓட்டம் வாழ்வில் மறக்க முடியாதவை!! (27.06.2022) முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓட்டத்தை முடித்து விடுவேன்.ஏனெனில்,அன்று நெடுதூர ஓட்டம் அதுமட்டுமில்லாமல் காலை முடித்துவிட்டால் அதோடு செவ்வாய்க்கிழமை தான் ஓட்டம்,திங்கள்கிழமை ஓட்டம் இருக்காது ரெஸ்ட் டே.😍 உறவினர் வீட்டிற்கு வந்தேன்.காலை ஓடலாம் என திட்டம் வைத்திருந்தேன் ஆனால் அங்கே காலை ஏலகிரி மலைக்கு செல்லலாம் என சொல்ல.காலை பைக்கிள் சென்றோம், அங்கு @funderapark  வெவேறு நாட்டு பறவைகள், முயல்கள் அதுஇதுவேன்று பார்த்து முடித்துவிட்டு. பின்பு அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப,சென்று சேர மணி 8.30 ஆகி விட்டது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஓடலாம் என உள்ளுக்குள் தோன்றினாலும் , கொஞ்சம் படுத்துவிட்டால் அசதியில் உறங்கிவிடுவோம் என பிரெஷ் ஆகி ட்ரெட்மில்லை ஆன் செய்து ஓடத்துவங்கினால் அது சரியாக வேலை செய்யவில்லை. ஷப்பா🤧 ஏற்கனவே நாள் முழுக்க பயணம் 300k வண்டி ஓட்டி உடல் அசதி.சரினு வெளியே கிளம்பினேன் அங்கே எனக்கு அவ்வளவாக வழி தெரியாது கேட்டு கேட்ட...

வாழ்வின் மிகப்பெரும் வலு நெருக்கமாமவரும் இழப்பு,அதுவும் தான் பெற்ற பிள்ளைகளில் மரணம்? இதை கடக்க என்ன செய்யலாம்?

வாழ்வில் மிகப்பெரிய வலி என்றால் அது மரணம் மட்டுமே. நம் வாழ்வில் ஏராளமான  மரணத்தை கண்டிருப்போம்,ஆனால் அது வெறும் மரணச் செய்தியாகவே வந்து சில மாதங்களில் மறந்துவிடும்.நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று.அது பிரிந்தாலும் சரி இறந்தாலும் சரி. தாய்,தந்தை இழப்பை கூட மகனோ மகளோ தாங்கி அவர்கள் நினைவில் வாழ்ந்து கடந்து விடுகின்றனர்.ஏனெனில் அவர்களுக்கு குடும்பம்,குட்டி என வந்துவிடுவதால் அப்படியே வாழ்க்கை சென்று விடுகிறது. ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தையின் (என்ன வயதானாலும் குழந்தை தானே) மரணத்தை பார்ப்பது வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.அந்த வலியை அம்மாவும்,அப்பாவும் வாழ்க்கை முழுக்க சுமப்பார்கள்.மிகவும் கொடுமையானது.வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் உணர்வார்கள். தன் மகன்/ள் உடல் முன்பு அவர்கள் கதறும் கடைசி மரண ஒளங்கள் கேட்க  முடியாது.இருக்கின்ற மொத்த வலியும் கண்ணில் கண்ணீராக தெரியும்.இதுவரை நிகழ்ந்த,அவர்கள் குணங்களை ல்,பிடித்த உணவுகளை நண்பர்களை பற்றியெல்லாம் கூறி எழுந்து வாடா செல்லமே என அழுகும் போது ஆத்மா மொத்தமும் கதறும். என் வாழ்வில் தன் மகனை/மகளை இழந்து தினம்...

Club House பரிதாபங்கள் - படிக்க வேண்டிய பதிவு!!!!

Club house எனும் செயலி சமீபத்தில் ட்ரெண்டில் இருப்பது,மற்ற சமூக வலைதளங்கள் போல இதுவும் ஒன்று,என்ன? இதில் வெறும் ஆடியோ வடிவில் மட்டுமே பேச முடியும்,இப்போது மெஸ்ஸேஜ் செய்யும் வசதியும் கொண்டு வந்துள்ளனர். இவைப்பற்றி கேள்விப் பட்டும் தள்ளியே இருந்தேன்,சரி என்ன தான் இருக்குனு உள்ளே சென்றேன். ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனால் போகப் போக புரிந்தது. பலருக்கு இப்போது இதுவே பொழுது போக்காக இருப்பது தெரிடவந்தது. என் நண்பர்கள் சிலரும் ஒரு ரூமில் இணைந்து பாட்டு கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்வதினால் மனஅழுத்தம் குறைவது போல் ஒர் உணர்வு என பகிர்கின்றனர். நிறைய தலைப்புகள்,புதிய மனிதர்கள்,நிறைய பொழுபோக்கு ,சிறிதளவு கற்றல் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. எனக்கு சேமிப்பு,முதலீடு,இலக்கு பற்றி சில கிளப்பில் இணைந்தேன்,பின்பு தெரியாமல் ஏதோ ஒரு ரூமில் இணைந்துவிட்டேன் யாரோ ஒருவர் ஒரு பெண்ணை ஆடை அணிந்தது  பற்றி சொல்லி விட்டு ஓடி விட்டார் போல,அதன் பிறகு ஒரே கத்தல்,கதறல்,கோபம்,அழுகை அந்த இடமே ரத்த பூமியாக இருந்தது.பின்பு தான் தெரிந்தது எல்லா ரூமில் இதே போன்ற ஏதாவது கொளாறு செய்...

ஹெல்மெட் அணிவதில் ஏன் அவ்வளவு சோம்பேறித்தனம்? விபத்து - விழிப்புணர்வு பதிவு

நேற்று அடையாரில் இருந்து வரும்போது வேளச்சேரி மேம்பாலத்தில் ஒரே போக்குவரத்து நெரிசல், ரைட்டு ஏதோ சம்பவம் ஆகி இருக்குன்னு கிட்ட போய்ட்டு பார்த்தா, சம்பவமே தான். முதியவர் வண்டி ஓட்டிகொண்டே பின்னால் பார்க்காமல் indicator போடாமல் ,சமிக்கை எதுவும் காட்டாமல் இடது பக்கம் திரும்பியுள்ளார்,வண்டியில் வேகமாக வந்த வாலிபர் இடித்ததில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர், இளைஞனுக்கு முகம்,கை காலலேலாம் பலத்த அடி அவர்க்கு அவரச ஊர்தியில் முதலுதவி செய்தார்கள்,பின் மருத்துவமனை சென்றார்கள். பெரியவருக்கு கை,கால்,முட்டி,பின் மண்டையில் தோல் பிரிந்து சதை தெரியும் அளவுக்கு அடி, சிறிது நேரம் சுய நினைவே இல்லை பிறகு பேசினார்.ஆனால் விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் நேரம் எடுத்தது.வண்டியில் வந்த 108ல் முதலுதவி செய்தார்கள்.பின் அவர் வீட்டிற்கு அழைத்து ஆள் வந்தவுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பினோம்.போகும்போது ஐயா ஒன்னும் இல்ல,சரி ஆகிடும் சொன்னேன்.ஆறுதலான வார்த்தை தான் அப்போது தேவை. அவ்வளவு பேர் நின்று உதவி செய்து வழி அனுப்பியது மனிதம் உயிரோடு இருப்பதை உணர்த்தியது.ஒரு சகோதரியும் கடைசி வரை...

மேதகு - ஒரு சிறிய விமர்சனம்

தமிழனத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இளமைப் பருவ வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நெருக்கடிகள்,அரசியல் அழுத்தத்தைக் கடந்து மாபெரும் வரலாறு வெளிவந்துள்ளது. இதுவரை தலைவர் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நாம் தலைவரை நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். ஏன் இலங்கை பிரிந்தது,ஏன் நம்மை ஆள துடித்தார்கள்,அடித்து நொறுக்கினார்கள் என்பதை தலைவர் "நாம் ஏன் திருப்பி அடிக்கயில்ல" எனும் கேள்வியில் அனைத்திற்கும் பதில் அடங்கியுள்ளது. அடங்கி ஓடியுங்கியது போதும் இனியும் எம்மக்கள் அடிமையாக இருக்க வேண்டாம் தமிழனை அடித்தால் திருப்பி அடி விழும்னு பயம் வரணும்னு தலைவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு கம்பீரம். தமிழ் ஈழ சொந்தங்களின் விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தி எடுக்கும் பிறமொழியாளர்கள் இருக்கும் இடத்தில் தற்போது இயக்குனர் கிட்டு அவர்கள் சமரசமில்லாத வரலாற்றை கொடுத்திருக்கிறார். உலகில் உள்ள அனைவரும் காண வேண்டிய படம் முக்கியமான எம் மக்களை கொச்சைப் படுத்தும் பிற மொழியாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எம் வரலாற்றை. குறைவான பண செலவு திர...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...