முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

காதல் என்றால்?காதல் முறிவு எப்படி ஆகிறது?Break Up-ன் வலி?கடந்து செல்ல முடியுமா?

காதல் தோற்றுப் போவதில்லை!! காதலர்கள்  தான் தோற்றுப் போகிறார்கள்!!♥️ இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பல துன்ப செய்திகள் கேட்டாலும் பல காதல் முறிவு செய்திகளையும் கேட்கவும்,பார்க்கவும் முடிகிறது. காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவின் வலியும் வேதனையும்,பார்வையாளராக எளிதில் கடந்து செல்ல முடியும்,ஏளனமாக சிரிக்கவோ ,கேலி செய்யவோ கூட முடியும்,ஏன் ஆறுதல் கூட சொல்ல முடியும் ஆனால் வலியை உணர்வது கடினம், அவ்வுணர்வில் இருந்து நகர்வது நரகம். சில ஆய்வுகளின் படி கண்டவுடன் காதல் எல்லாம்  முக்கால் வாசி பிரிவில் தான் முடிந்தள்ளது.பேசி,பழகி,புரிந்து உணர்ந்த காதல் மட்டுமே நிலைத்து நின்றதாக கூறுகிறது. இப்போது காதல் செய்வது எல்லாம் ட்ரெண்ட் ஆகி விட்டதல்லவா?அதை செய்யவில்லையென்றால் என்னவோ மாதிரி பார்கிறார்களே. காதல் எவ்வயதிலும் வரும் ஆனால் அது காதல் தானா என்பது தான் இங்கு கேள்வியே? நாள் முழுக்க கடலை,ஊர் சுற்றுவது,நிறைய பரிசுகள் இது மட்டுமல்ல காதல்.உள்ளத்தால் இணைந்து   உணர்வோடு கலந்து வாழ வேண்டும்.காதலில் புரிதலும் ,விட்டுக்கொடுத்தலும் முக்கியமான ஒன்று. முறிவின் தொடக்கமே இது தான் ...

2k கிட்ஸ் குட்டி வடிவேலு,சோபி கதை என்ன? ஏன் ட்ரெண்ட் ஆனது ?இதை கலாய்ப்பவர்களுக்கு சில கேள்விகள்?

சமீபத்தில் ட்ரெண்டில் இருக்கும் குட்டி வடிவேலு எனும் சஞ்சய்♥️சோபியை  ஓட்டாத ஆளே இல்லை. வாட்சப்,முகப்புத்தகம், யூ ட்யூப்னு எங்கு பார்த்தாலும் ட்ரோல்ஸ் தான் அவர்களின் எண்ணமும் ட்ரெண்டிங் ஆவது தான், அவர்கள் மட்டுமல்ல  ரீல்ஸ்,டிக் டாக் செய்பவர்கள் அனைவருக்கும் தான் ட்ரெண்ட்ஆக வேண்டும் என்பது  தானே விருப்பம்,அனைவருக்கும் தன்னை பலருக்கும் தெரிய வேண்டும்,பாராட்ட வேண்டும் என்பது தானே ஆசையும் கூட. மற்றவர்கள்  போல் இவ்விடயத்தை சிரித்து விட்டு கடந்து செல்ல முடியவில்லை, ஒரு விதமான கோபவும்,கேள்விகளும் எழுகிறது! என் பார்வை சரியானதா என தெரியவில்லை,அதுமட்டுமில்லாமல் முக்கால்வாசி பேருக்கு எதிரான,முரணான கருத்தாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 17 வயது சிறுவன் 2k கிட் சஞ்சய்,சோபி  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு பாராட்டி பேசி வந்து தன் காதலை அப்பெண்ணிடம் சோபியிடம் வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கும் பிடித்து போகவே ஓகேசொல்லியுள்ளார். பெற்றோர்களிடம் இதை தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இக்கால பெற்றோர் என்பதால் சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன். சஞ...

வாழ்வில் பல சாதனைகள் செய்ய துடிப்பவரா நீங்கள்? இப்பதிவு உங்களுக்கு தான்!!

சாதிக்க துடிக்கும் பலரின்  வாழ்வைப் பற்றி சில வரிகள்!!! இவர்களுக்கு தீராத வெறி சாதிக்க வேண்டும், நாம் நினைத்த வெற்றியை அடைய வேண்டும், உலகமே திரும்பி பார்க்கும் அளவுற்கு சாதிக்க வேண்டும் .நான் வீழ்வேன் என்று நினைத்த உறவினர்கள் மற்றும் சமூகத்துக்கு முன் எழுந்து நின்று வாழ வேண்டும் என  இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்,இவர்களின் இலக்கு தெளிவாக உள்ளது,அதற்காக தான் அனுநொடியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்....! ஆனால் ............. வெறி இருக்கும் அளவுற்கு இவர்களிடம் பணம் இல்லை ல்.ஆம் ,தேவையான  பொருட்கள் வாங்க ,மருத்துவ செலவு, 3 வேலை சரியான உணவு உண்ண,பயணம் செய்ய என பல காரணிகள் உண்டு பலர் திறமை இருந்தும் பணம் என்னும் மதிப்புமிக்க காகிதம் இல்லாததால் அவர்கள் இலக்கை எட்ட முடியாமல் போய் விடுகிறது!  இதை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!! உன்னை வழிநடத்த , உனக்கு உதவி செய்ய,உனக்கு தோள் கொடுத்து தூக்கி விட யாராவது வருவார்கள் என எதிர்பார்க்காதே இது அவசியம் இல்லாதது,உனக்கு நீ மட்டுமே ஆசான், உன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இரு மேலே குறிப்பிட்டவை  எல்லாம் த...

நடிகர் விவேக்கின் வாழ்க்கை நம்முள் விதைத்தது என்ன? எப்படி திடீர் மரணம்?

நடிகர் விவேக்கின் மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவரின் இறப்பை!!! அப்துல் கலாம் ஐயாவின் ஆசிப்பெற்ற ஆளுமை மனிதர் விவேக்,வாழ்ந்தவரை யார் வெறுப்பையும் சம்பாதிக்காமல் பலரின் அன்பை மட்டுமே பெற்று  சென்றுள்ளார் என நினைக்கிறேன்,திரை வாழ்விலும் ஆரோக்கியமான போட்டியாகவே இருந்தது,அவரின் நகைச்சுவையை சிறுவயதில் பார்த்தால் நகைச்சுவையாக மட்டுமே தெரியும், போக போகத்தான் அதில் உள்ள கருத்துகளும், அர்த்தங்களும் புரிய துவங்கும்,சிந்தக்க தூண்டும். மதுரையில் பிறந்து பள்ளிப்படிப்பு,கல்லூரியை முடித்து, டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை யைத் துவங்கி, சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் துவங்கி சினிமாவில் முடிந்தது அவர் வாழ்க்கை. திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்கு இந்திய அரசு அவருக்கு மிகவும் உயரிய விருதான "பத்ம ஸ்ரீ" விருது கொடுத்து கௌரவித்தது. அப்துல் கலாம் ஐயாவின் ஆசையை முழு மூச்சாக செயல் படுத்தி வந்தார்,அந்த ஆசை ஒரு கோடி மரங்களை விதைப்பது, விவேக் அவர்கள் லட்சக்கணக்கான மரங்களை விதைத்து இப்பூமியை பசுமை ஆக்கிக் கொண்டிருந்தார். ஆனால் இன்...

சேமிப்பு, முதலீடு அவசியமா? இல்ல ஜாலியா வாழ்ந்துட்டு போய்டலாமா?

வாஸ்துவம் தான் ராஜா, செமையா வாழனும், வாழ்க்கைய அனுபவிச்சு வாழனும்,என்ஜாய் பண்ணனும் தான் ஆனால் பணத்தால்  மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என  இருந்துவிடக் கூடாது. சிறு சிறு விஷயங்களில் இருந்து நம் மகிழ்ச்சி உண்டாகிறது,அது மனதைப் பொறுத்து நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து.  பெரிய திரையரங்கில் படம் பார்க்கணும்னு இல்ல ,நார்மாலான இடத்துக்கு புடிச்சிவங்க கூட அதே எபெக்டோட பாக்குறது வேற லெவல் பீல்,ஊட்டிக்கு போய்ட்டு தான் இயற்கைய ரசிக்கனும்னு இல்ல உங்க வீட்டு கிட்ட இருக்க ஏரி, குளம்,ஏன்? பூங்காவில் அமைதியாக காற்று வாங்கிக்கொண்டு ரசிக்கலாம். அதுக்காக இதையெல்லாம் அனுபவிக்க கூடாது என்பதில்லை, இது கிடைத்தால் மட்டும் தான் மகிழ்ச்சி அடைவேன் என்பதாக இருக்க கூடாது. பலர் சேமிப்பு,முதலீடு என்றாலே சலித்துக்கொள்கின்றனர் ,"அட போயா வாழ்றது ஒரு வாழக்கை போகும்போது என்னத்த கொண்டு போக போறோம்னு" தான் பெரும்பாலோனோர் சொல்கின்றனர். மனதிடம் கேட்டால் "செலவு பண்ணு எதுக்கு சேமிப்புனு சொல்லும்" கொஞ்சம் ஆழ்ந்து அறிவிடம் கேட்டால் " சேமிப்பு முக்கியம் பிகிலு  அதுதான் உன்னை நிதி வாழ்வை மாற்றும்...

தரமான பொருள் வாங்குவது எப்படி? Realme Wireless Bluetooth Headphone விமர்சனம்!!!

நேற்று குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் பற்றியும் உடன் கொஞ்சம் அதிகம் பணம் போட்டு தரமான பொருளை வாங்கலாம் என்பதை பற்றி பதிவிட்டிருந்தேன், அப்பதிவை படிக்க கீழ உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்👇🏻>. https://ashokkumarsudarsanam.blogspot.com/2021/04/blog-post.html நான் எப்போதுமே ஒரு பொருளை வாங்கும் முன்பு எனக்கு இப்போ இது  அவசியம் தானா? நல்ல பிராண்ட்டா? விமர்சனம் எப்படி இருக்கு? நிறைய வசதிகள் இருந்தாலும் எனக்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பதை பார்ப்பது வாடிக்கை அதுமட்டுமில்லாமல் டெக்கிஸ்களிடம் (Techies) ஆலோசனை கேட்பதும் தான். ● ஹெட்போன் Realme(1,800),Oneplus (2,000) Oneplus ஹெட்போன் நண்பனிடம் இருந்து வாங்கி உபயோகப்படுத்தினேன் நல்லா தான் இருந்தது ஆனா ரொம்ப bass இல்லாம நார்மலா டீசென்டடா இருந்துச்சு, ஆஃபீஸ் ஒர்க்குக்குலாம் இது ஓகே பட் மியூசிக் லவ்வர்ஸ் இல்ல நிறைய பயணம் செய்கிறவர்களுக்கு  இது செட் ஆகாது!! சரி realme wireless bluetooth headphone வாங்கலாம்னு முடிவு பண்ணேன்,Mi, Boatலாம் நிறைய பார்த்தேன் ஆனால் அனைத்தையும் விட இந்த விலைக்கு இது சரியாக இருக்கும் என தோன்றியது. ஒரு...

குறைவான விலைக்கு கிடைக்கும் டுபாக்கூர் பொருட்கள் வேண்டாம் | விழிப்புணர்வு பதிவு

எனக்கு ப்ளூடூத் ஹெட்போன் அவசியமாக இருந்தது,நிறைய அழைப்புகள், அதுமட்டுமில்லாமல் podcast ,பாடல்கள் ,புத்தகங்கள் பற்றி கேட்பது என எப்போதும் உபயோகமாக இருக்கும். Realme Wiress  Earphone மேல் ஒரு ஆசை பார்த்தால் விலை 1,800 ஓவா சரி பொறுமையா வாங்கிக்கலாம்னு இருந்தேன் ,நண்பர் ஒருவர் "நான் பாரிஸ்ல தான் இந்த ஹெட்போன் வாங்கினேன் 400 ரூபாய் தான்னு சொன்னார்,யூஸ் பண்ணி பார்த்தேன் நல்லா தான் இருந்துச்சு ஒரிஜினல் மாதிரி. சரி நானும் வாங்கலாம்னு மெனக்கெட்டு பாரிஸ் வரைக்கும் போய்ட்டு பேரம் பேசி வாங்கிட்டு வந்தேன் 800ரூ சொன்னாங்க 600 ரூபாய்க்கு வாங்கினேன். ஒரிஜினல் மாதிரி பேக்கிங் (உள்ளுக்குள் 600 ரூபாய்க்கு எப்படின்னு ஒரிஜினல்னு  கேள்வி இருந்தாலும் 600 ரூபாய்க்கு ஓகேனு வந்தாச்சு) 1 வருஷம் வாரண்டினு சொன்னாங்க. ஓரு 1 வாரம் நல்லா இருந்தது அப்போ கூட சரியா கனெக்ட் ஆகவில்லை,சவுண்ட் சரியாக இல்லை,சார்ஜ் நிக்கல அண்ட் ஒரு சைட் சுத்தமா ஒர்க் ஆகாம போச்சு,ஒரு பக்கம் அறுந்து தொங்கிடிச்சு, சரினு கடைக்காரருக்கு கால் பண்ணி அட்ரஸ் கேட்டா ,கடை அட்ரஸ் கூட தெரியல எப்படி என்கிட்ட வாங்குனிங்கனு கேக்குறாப்ல. அங்க ஒரு 50,...