முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

காத்திருக்க வேண்டாம்...!

பலர் சொல்லி கேட்டிருக்கிறேன்,ஏன்? நானே கூட சொல்லி இருக்கிறேன்.

உடற்பயிற்சி செய்ய, நடைப்பயிற்சி செல்ல உடன் யாராவது வந்தால் நல்லாருக்கும்லனு,அப்படியும் சிலர் கிடைப்பார்கள் நாமும் தினமும் அவரை எதிர்பார்த்து,அவரும் நம்மை எதிர்பார்த்து செல்வோம்,திடிரென யாராவது ஒருவர்  சொதப்பினால் போதும் இவரும் அதான் அவரே வரலையே இன்னைக்கு போக வேண்டாம் நாளைக்கு போவோம்னு செமையாக தூக்கத்தை தொடர்வார்.

உடன் ஒருவர் வந்தால் நன்றாக தான் இருக்கும், இன்னும் போட்டிபோட்டுக் கொண்டு செய்யலாம்,ஆனால் யார் வந்தாலும் வரா விட்டாலும் உறுதியாக செல்ல வேண்டும என்ற சுயஒழுக்கம் அவசியம் தேவை.

இதனால் மறுபக்கத்தில் இருப்பவர் கோவித்துக் கொண்டாலும் பிரச்சனை இல்லை ஏனென்றால் இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட அவருக்கு பக்குவம் இல்லை என்பதை அறிய இது ஓர் வாய்ப்பாக அமைகிறது அல்லவா..!

ஒரு நேரம் வரை காத்திருக்கலாம் இல்லையெனில் கிளம்பிவிடலாம், இன்றும் இது போல் தான் ஆனது சில நிமிடங்கள் காத்திருந்தேன் கிளம்பிட்டேன்.

இன்று மாலை தாம்பரம் டூ போரூர் நெடுஞ்சாலையில் மிதிவண்டி பயணம் எதிர்காற்று கொஞ்சம் அதிகம் தான் ஆனாலும் அருமையாக இருந்தது,கொஞ்சம் கூட அழுத்தம் கொடுக்காமல் மிகவும் ஆசுவாசமாக ஓட்டினேன், பயணத்தின் போது இன்னொருவரை சந்தித்தேன், பெயர் பட்டுராஜா,மேற்கு தாம்பரம் ,வாரத்தில் 5 நாள் தாம்பரம் டூ போரூர் டூ அம்பத்தூர் டூ தாம்பரம் ,கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்களை செய்யும் வியாபாரம் செயகிறார், அதனால் தொழில் வேலையாக போரூர் செல்கிறார் உடன் உடற்பயிற்சியும் முடிகிறது.

அருமை சகோ,நல்லா பண்ணுங்க சைக்கிளிங் குழு உள்ளது இருக்கிறது விருப்பமிருந்தால் சொல்லுங்க இணைத்து கொள்ளுங்கள் என்று டாட்டா காட்டி விட்டு கிளம்பிட்டேன்..

இங்க வந்தா போக்குவரத்து நெரிசல் எல்லாம் கடந்து வந்தாச்சு ..

நானெல்லாம் ஜட்டி ,பனியன் எடுக்கணும்னா கூட யாரையாவது உடன் கூட்டி செல்வேன், இப்போதெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பது இல்லை, அது அவசியமற்றதும் கூட..

எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை கொடுக்கும்....!

பயணிப்போம்

#cycling #cyclingride #highwayride #FITNESS

#dontwaitforsomeone #letsgo #relax #WCCG #tbmchapter WCCG (Chennai Cyclists)

கருத்துகள்

  1. நல்ல பதிவு சகோ.. நானும் இதை போன்று தான்.... யாராவது என்ற சொல்லை பயன்படுத்தி கொண்டு இருந்தேன்.... ஆனால் இன்றிலிருந்து.... மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.... Tq for u good advice... 👍👍

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அன்பும் நன்றியும்♥️

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...