முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Feautured Post

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அரவாணிகள் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர்? இதற்கு தீர்வு தான் என்ன?😐🥵

சிலரால் மட்டுமே எப்போதும் ஒரு குழுவினருக்கோ,சமூகத்திற்கோ,இனத்திற்கோ,நிறுவனத்திற்கோ அழியா களங்கம் ஏற்பட்டுவிடுகிறது.  இன்று காலை என் வியாபார வேலையில் இருக்கும்போது 4 பேர் கொண்ட அரவாணி அக்காக்கள் வந்தார்கள், "சாமி கும்பிட போறோம் 100ரூபாய் கொடுதன்னா அரிசி வாங்கிக்குவோம்னு" சொல்ல நானோ "இன்னும் போனி ஆகலை கா"."நீ கொடு தம்பி சில்லரை தரேனு சொல்ல, நான் வந்ததற்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே என கொடுத்து 100ரூ கொடுத்து 80ரூ கேட்டேன் ,வாங்கிய வேகத்தில் ஓட்டம் பிடித்து அடுத்து களவாட சென்றுவிட்டார்கள்.   நானோ மீதம் கொடுங்கன்னா கிளம்பிவிட்டீர்கள் உங்களுக்கு 500 ரூபாய் கொடுத்தால் அவ்வளவு தான் போலவே என சொல்ல இல்ல 400 ரூபாய் கொடுத்திருப்பேன் என சொல்லி ஓடியே விட்டார்கள் வந்த கலவாணிகள்.  மூன்றாம் இனமான அரவாணி சகாக்கள் அரசு வேலை,தொழில் முனைவோர்,சினிமா இன்னும் எவ்வளவு துறைகளில் கொடி கட்டி பறக்கின்றனர். பலர் நல்ல வேலையில் இருக்கிறார்கள் இவர்களை போல் சிலர் ஏன் இப்படி செயகிறார்கள் என தெரியவில்லை. ரயில்,பேருந்து,கடற்கரைகளில் இவர்களை கண்டு சற்று பயம் தான் வருகிறது ...

அயலி Webseries எப்படி உள்ளது? பெண்கள் படிக்க தடையா! பார்ப்போம் தரமான சம்பவம்😲🛑🙏

அயலி என்னதான் நல்ல படமாக இருந்தாலும் விறுவிறுப்பாக சென்றாலும் படத்தை எப்போது முடித்து அடுத்த சோலியை பார்க்கலாம்  என்று தான் எப்போதும் தோன்றும்.சில படங்கள் தான் இன்னும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கலாமே, அடுத்த பாகம் எடுத்தால் நல்லாருக்கும் என தோன்றும். அதே போல் தான் அயலியும் மிகவும் பிடித்திருந்தது.முதல் இது படம் அல்ல சீரிஸ் எனக்கு சீரியல் பார்க்கும் பழக்கமும் இல்லை சீரிஸ் பார்க்கும் பழக்கமும் இல்லை.  அயலி மொத்தம் 8 பாகம்,கிட்டததட்ட 4 மணிநேரத்திற்கு மேல். ஆனால் எந்த ஒரு நேரத்திலும் என்னடா எப்படா முடியும், என்ன இந்த காட்சி இப்படி இருக்கு  என்றெல்லாம் தோன்றவே இல்லை. ஹீரோ இல்லை,சண்டைக்காட்சி,காதல் ,நம்ம ஊர் திரைப்படங்களில்,நாடங்கங்களில் வருவது போல் தேவையில்லாத ஆணி பாடல்கள் இல்லை. முழு நேரமும் நம்ம சொந்த ஊர்களில் நாம் இருந்து வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.ஒவ்வொரு காட்சியும் நடிப்பாக இல்லாமல் மிகவும் இயல்பாக ரசிக்கும் படியாக இருந்தது. அயலி - அந்த ஊருக்குள் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்து ஓடி விட்டார்களாம் அதனால் அந்த ஊர் எரிந்து நாசமாகியது என சொல்கிறார...

சாலையை கடப்பவர்களுக்கு விபத்து நடப்பது எப்படி? யாருக்கு பாதிப்பு? எப்படி தவிர்க்கலாம்!! | சாலை விபத்து

காலை வேலைக்கு செல்லும்வழியில் சிக்னல் இல்லாத இடத்தில் இரு பெண்கள் (இளைஞ்சிகள்)  சாலையை கடக்க குடுகுடுவென ஓடியிருக்கிறார்கள்.சிக்னல் பச்சை விழுந்தவுடன் வண்டியெல்லாம் பறக்கும்(பறக்க தானே வேண்டும்) அவரவர்க்கு அவரவர் வேலை. இரு பெண்களையும் மோதியுள்ளார்,மோதிவிட்டு ஓடவில்லை அங்கேயே தான் இருந்தார் எனக்கு தெரிந்து அவர்மேல் தவறில்லை, திடீரென வண்டியை மெதுவாக்கி நிறுத்துவது கடினமான செயல் தான்!! இடத்த இடியில்  ஒருவருக்கு கால்,முட்டி கையெல்லாம் அடி, இன்னொரு சகோதரிக்கு கை, கால்,நெற்றி, கண்ணத்திலிருந்து ரத்தம் வந்துகொண்டே இருந்தது,எல்லாம் தண்ணீர் கொடுத்து கொண்டு,ஆம்புலன்ஸிற்கு கால் செய்து கொண்டிருந்தார்கள்,அங்கு வந்த அக்காவிடம் ஒரு துணியை வாங்கி நெற்றியில் மெல்ல கட்டி விட்டோம். ஆம்புலன்ஸ் வர ஏற்றி அனுப்பினோம்.இடித்த நண்பருக்கு இன்று செமஸ்டர் தேர்வு நீங்கள் கிளம்புங்க என சொன்னால் எப்படி ஜி போறது. வண்டியை  திருப்ப முடியவில்லை,சாவி வேறு எடுத்துவிட்டார்கள் அடுத்து போலீஸ் வண்டியை தள்ளி சென்று அவரை கொண்டு கூட்டி சென்றனர் என்னாச்சோ தெரியவில்லை,வழியில் கோவிலில் நின்று கும்பிட்டு சென்...

வார்த்தைகள் ஆக்கும், அழிக்கும்!!!

வார்த்தைகள் அழிக்கும்!! வார்த்தைகள் சீரழிக்கும்!! வார்த்தைகள் அவமானப்படுத்தும்!! வார்த்தைகள் அழ வைக்கும்!! வார்த்தைகள் கொள்ளும்!! வார்த்தைகள் சாகத் தூண்டும்!! வார்த்தைகள் காயங்கள் ஏற்படுத்தும்!! அதே வார்த்தைகள்..... வார்த்தைகள் உங்களை வளர்க்கும்!! வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கும்!! வார்த்தைகள் உங்களை பாராட்டும்!! வார்த்தைகள் உங்களை செழிப்பாக்கும்!! வார்த்தைகள் உங்களை பெருமையாக உணரச் செய்யும்!! வார்த்தைகள் உங்களை கொண்டாடும்!! வார்த்தைகள் உங்களை குளிர்விற்கும்!! வார்த்தைகள் உங்களை மெருகேற்றும்!! வார்த்தைகள் உங்களை அழகாக்கும்!! வார்த்தைகள் உங்களை அறிவாளி ஆக்கும்!! வார்த்தைகள் சாந்தப்படுத்தும்!! வார்த்தைகள் சமாதானம் செய்யும்!! வார்த்தைகள் உங்களை செதுக்கும்!! வார்த்தைகள் காயங்களை ஆற்றும்!! வார்த்தைகள் தன்னம்பிக்கை கொடுக்கும்!! வார்த்தைகள் வாழத் தூண்டும்!! வார்த்தைகள் சாதிக்க தூண்டும்!! அதே வார்த்தைகள்..... என்னென்ன செய்யும் என்பதை நீங்கள் சொல்லுங்கள்!? வார்த்தைக்கு மிகப்பெரும் சக்தி உண்டு அது நாம் மற்றவர்களுக்கு கொடுத்தாலும்,மற்றவர்கள் நமக்கு கொடுத்தாலும்,அவ்வளவு ஏன்...

பெரிசுகள் பரிதாபங்கள் ❗❗ செல்போன்ல டவுட்டு கிளியர் பன்னது குத்தமா😲😫

பெருசுகள் பரிதாபங்கள்😀 போனில் ஏதாவது சந்தேகம்,இவர்களுக்கு கால் செய்ய வேண்டும்,வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும்,படம் தரவிறக்கம் செய்யவேண்டும் அது இதுவென்று எத்தனை சந்தேகம் என்றாலும் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூகுள் அல்லது யூ டூயூப்பில் அல்லது வேறு யாரிடமோ கேட்டு கூட அவர்கள் கேட்ட விடயத்தை செய்து கொடுப்போம். நான் எப்போதும் செய்து கொடுப்பதைவிட, எப்படி செய்ய வேண்டுமென்பதை சுலபமாக சொல்லி கொடுத்துவிட்டால் அவர்களே அடுத்த முறை ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டிருக்காமல் செய்து விடுவார்கள்.சிலர் கற்றுக்கொள்ள கூட மாட்டார்கள் அது வேற கதை. எல்லாம் செய்து கொடுத்த பின்பு " டேய் தம்பி உன்கிட்ட போனை கொடுத்தது தப்பா போச்சு டா பார்ரா இது ஒர்க் ஆகவே  இல்லை" என நம்மேல் பாய வருவார்கள். எப்பா சாமி உங்களுக்கு செய்துகொடுத்தற்கு நம்மை செய்து விடுவார்கள்😫 எப்புற்ரா.....!  சமீபத்தில் ஒருவருக்கு போனில் டிவி சானல்கள் பார்க்க வேண்டும் என சொல்ல ,செயலியை தரவிறக்கம் செய்து கொடுத்தேன்.சில நிமிடங்களில் டேய் "என்னடா  கால் வருது ஆனா எந்த பெயரும் காட்ட மாட்டேங்குதுனு" சொல்ல அரை மணிநேரம...

avatar the way of water எப்படி?❗ ஒரு முறை பார்க்கலாமா - திரை சுமர்சனம்😫

Avatar The Way Of Water  (விமர்சனமாக கூட எடுத்துக்கொள்ளலாம்) ஏதாவது எழுத வேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் என்னத்த எழுதனு விட்டுவிடுவேன் ஆனால் இந்நேரம் ஆகியும் இதை நிச்சயம் எழுதுவதற்கு காரணம் உங்களின் மேல் உள்ள பாசம் நீங்களும் என்னைப் போல் அவஸ்தை பட வேண்டாமென்பதால்...... 2009ல் வெளியான அவதார் 1 எங்கள் மாமா வீட்டில் 3டி டிவியில் பார்த்தோம் நன்றாக தான் இருந்தது.இப்போதும் எனக்கு பெரிதாக இப்படம் செல்வதில் விருப்பமில்லை தம்பியும் ,நண்பனும் கேட்டதால் சென்றேன். அதுவே தாமதமாக தான் சென்றோம் நல்ல வேலை கொஞ்ச நேரம் தப்பித்தேன்😲. படத்தின் கருவே அவதார் தன் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்,வனவாசியாக இருந்த அவர்கள் தன் குடும்பத்தை காப்பாற்ற கடல்வாசியாக மற்றொரு இனம் வாழும் தீவிற்கு சென்று அடைக்கலம் கேட்டு செல்கின்றனர். அங்கு அவர்களை ஏற்றுக்கொண்டார்களா? வில்லன் எப்படி இவர்களை கொள்ள முயற்சிக்கிறான்,யார் பிழைத்தார்கள்,உயிருடன் இருந்தார்கள் என்பது  க்ளைமாக்ஸ்.   ஆரம்பம் முதல் படம் முடியும் வரை "அய் யய்யோ எப்படா படம் முடியும்" ஏண்டா இப்படி கொல்றீ...

குழந்தைகள்களை பள்ளிக்கு கூட்டி செல்லும் பெற்றோர்களின் கவனத்திற்கு📍🔴| இதை பின்பற்றுங்கள்!!!

தினமும்  பிள்ளைகளை பள்ளியில் இறக்கி விடும் நண்பர்களே,அன்பர்களே!! என்னப்பா ஒரு ஸ்கூல்னு இல்லை ஊருக்குள்ள எங்க பார்த்தாலும் தான் பிள்ளையை இறக்கி விட்டுட்டு ஓடிட்டா போதும் டா சாமினு இருக்கீங்க போல.ஏன் அப்படி சொல்றேன்னா பின்னாடி ல்,முன்னாடி,இந்தப் பக்கம்,அந்தப் பக்கம்னு எந்த பக்கமும் பார்ப்பது இல்லை,வண்டி மட்டுமில்ல ஆட்டோ,கார்னு டர்று புர்ருன்னு இஷ்டதுக்கும் போறது.இதுல நீங்க பாதிக்கப்படறது இல்லை ஏன்னா நீங்க தான் யாரையும் பார்ப்பது இல்லையே. ஆனால் அவ்வழியே செல்லும் மக்கள் தான் உங்களையெல்லாம் என்ன செய்வது என்று மனதிற்குள் புலம்பி சிரமப்பட்டு செல்கின்றனர். தயவுசெய்து அவ்வழியே மற்றவர்களும் செல்ல வேண்டும் என உணர்ந்து அக்கம் பக்கம் பார்த்து நீங்களும் சுமுகமாக நின்று மற்றவர்களுக்கும் வழிவிடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்♥️🙏 நன்றி வணக்கம்♥️😀😅 ✍️ அசோக் குமார் சுதர்சனம் #school #Traffic #akwrites

EMIயில் பொருட்கள் வாங்கலாமா? இவர்கள் செய்யும் டுபாக்கூர் தனங்கள் என்ன? #emi

நான் பொதுவாகவே என்ன சவால்கள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் யாரிடமும் கடன் வாங்க மாட்டேன்.ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நன்றாக தெரிந்த நண்பர்களிடம் வாங்கினால் சில நாட்கள் அல்லது வாரத்தில் சொன்ன தேதியில் கொடுத்து விடுவேன். AC வாங்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில் முழு பணம் இல்லை அப்படி இருந்தாலும் முழு பணத்தை அதில் போட்டால் லாக் ஆகி விடுவேன்.சரி zero cost EMIனு இருக்கே முயற்சி பண்ணுவோம்னு முயற்சித்தேன்.ஏற்கனவே தெரியும் Bajaj கார்டு வாங்கினால் கார்டுக்கு ஒரு பணம் processingக்கு பணம்னு. எல்லாம் தெரிஞ்சி வாங்கிவிட்டோம். ஆரம்பத்தில் டவுன் பேமெண்ட் கட்டி விட்டேன், எங்களுக்கு ஆட்டோ டெபிட் ஆப்ஷன் வேண்டாம் வேறு வங்கியில் இருந்து கட்டி விடுவோம் என்று சொல்லிவிட்டோம்.ஆனால் அடுத்த மாதம் என் வங்கியில் இருந்து கட்டினேன் auto debit செய்யும்போது அதில் பணம் இல்லையென ஒரு பெனால்டி ,எப்போதுமே முதல் மாதம் கூடுதலாக 200 ரூபாய் புடிப்பார்களாம் அதை கடைக்காரர்கள் சொல்லவில்லை. இன்னொரு திருட்டு தனம் என்னவென்றால் அதில் தானாகவே அவர்கள் பக்கத்தில் இருந்து insurance இணைந...

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது | உயிராக இருந்தாலும் ,பொருளாக இருந்தாலும்!!!!

சில விடயங்கள் போனால் வராது,பொழுது போனால் கிடைக்காது!! அது ஒரு உறவாக,பொருளாக இருக்கலாம். பொருள் என்றால் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும்,அதை சரியாக சேவை(service) செய்யாமல் உபயோகப்படுத்திக்கொண்டே இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கர் செய்யும் அடுத்து வேலை செய்யாது அல்லது கவனமாக வைத்திருக்காமல் எங்காவது தவற விட்டுக்குடிப்போம்.  அடுத்து என்ன செய்வோம் "இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்,சோம்பேறித்தனம் பார்க்காமல் ஒழுங்கா சர்வீஸ் செய்திருக்கலாம்" என அழுது, புலம்ப வேண்டியது. ஒரு பொருளுக்கே இப்படினா நமக்கு பிடித்த,நம்மை பிடித்த,நமக்காக வாழும் உயிரை நாம் எப்படி அன்பை பகிர வேண்டும்,பார்த்துக்கொள்ள வேண்டும்,அவர்களுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு நீங்கள் அவர்களுடன் இருக்கிறீர்கள் என உணர்த்த/உணர வேண்டும்.சின்ன சண்டை தான்  யார் மன்னிப்பு கேட்பது என தொடங்கி பெரிய விரிசலாகி விடும். அதோடு வாழ்வில் அதே உறவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.   ஒரு சின்ன சாரி தான் அதை கேட்பதற்கு நமக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு தான் கேட்க வேண்டும்...

தமிழ் படத்தில் ஏன் மற்ற மொழிகளை திணிக்கன்றனர்? இதெல்லாம் தேவையில்லாத வேலை!!!

இதை பெரும்பாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள் ஏனெனில் படத்தை படமாக ,பொழுதுபோக்கு போக்கை பொழுது போக்காக பார்ப்பது தானே நம் பழக்கம் ஆனால் நாம் அதிகம் விரும்பும் சினிமா,நாடகம்,குழந்தைகள் பார்க்கும் கார்டூன்ஸ் போன்றவற்றின் மூலம் தான் நம் மனதில் எதை திணிக்க நினைக்கிறார்களோ அதை சிறு வயது முதலே சிறப்பாக திட்டமிட்டு செய்கின்றனர். நம் தமிழ்நாட்டில்,நம் அக்கம் பக்கத்தில் மற்ற இனத்தினரும் ஒன்றாக தான் நண்பர்களாக வாழ்கிறோம்.ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஏன் தமிழ் படத்திற்குள் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என ஒரு குடும்பத்தை அறிமுகம் செய்து அதிலும் மேலே தமிழ் கூட டப் செய்யாமல் மற்ற மொழியிலையே பேசுகின்றனர். ஏன் கீழே ஆங்கிலத்தில் கூட என்ன பேசுகிறார்கள் என்பதை போடுவதில்லை. இதே போல் மற்ற மாநில திரையுலகில் செய்தால் படக்குழுவினருக்கு செருப்படி விழும். ஒரு படம் என்பது எந்த மொழியில் எந்த மாநிலத்தில் வெளியிடுகிறார்களோ அந்த மொழியில் முழுவதும் இருப்பது தானே சரி. என்ன கூற நினைக்கிறார்கள் என நினைத்தால் தமிழர்களை விட நாங்கள் அதிகம் வசிக்கிறோம்,நாங்கள் பெரும்பாண்மை,வீட்டில் மட்டும் எங்கள் தாய் மொழியை பேசிவிட்ட...

மறைந்த பின்பு அழுவதை விட வாழும்போது நேசியுங்கள் !!!

இங்கே முக்கால்வாசி பேர் ஒருவர் அருகில் இருக்கும் போதோ,உயிருடன் இருக்கும்போதோ கோபம், ஈகோ போன்ற பல்வேறு காரணிகளால் நம் அன்பிற்குரியவரை கண்டுகொள்ளாமல் பேசாமல் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். சரி தான் அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை தடுக்கிறது ஆனால் அனைத்தையும் தகர்த்தெறிந்து 5 4 3  2 1 என எண்ணிவிட்டு நேராக சென்று  பேசிவிடுங்கள்,அழுது விடுங்கள், அணைத்து விடுங்கள். நன்றாக இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு ,உடல் நிலையில் சரியில்லாத போது ,எழுந்து நடக்க,பேச முடியாத நிலையில் இருக்கும்போது எங்கிருந்து தான் உணர்ச்சி நமக்கெல்லாம் பெருக்கெடுத்து வருகிறதோ தெரியவில்லை. அப்போதாவது வருகிறதே 😏 அப்போதும் கல் நெஞ்சை சுமந்து நடமாடினால் நாம் நடை பிணம் தான். சில  சூழ்நிலைகள் இதை ஆழமாக உணர வைக்கும். ஒருவர் உயிரோடு இருக்கும்போதே பேசுங்கள்,அவர்கள் பேசுவதை கேளுங்கள்,பாராட்டுங்கள்,கொண்டாடுங்கள் அவர்கள் உங்களோடு இருப்பதை உணருங்கள் எதிரில் இருப்பவர் எவ்வளவு விடாப்பிடியாக இருந்தாலும் நம் மேல் தவறே இல்லையென்றாலும் அவர் நமக்கு வேண்டுமெனில்,அவருக்கு நாம் வ...

பதிவு செய்த பேருந்து தாமதமானால் என்ன செய்யலாம்? | ஓட்டுனர்கள் வாழ்க்கை இப்படிப்பட்டதா?🙏♥️

வெளியூருக்கு செல்லும்போது நாம்  தனிப்பட்ட  இருசக்கர அல்லது மகிழுந்து உபயோகிப்போம், நெடுதூர பயணமென்றால் பெரும்பாலும் ரயில், அது கிடைக்காத பட்சத்தில் தனியார் அல்லது அரசு பேருந்து ல் இன்னும் சொகுசாக வேண்டுமெனில் தனியார் ஆம்னி பேருந்துகள் செமி ஸ்லீப்பர் அல்லது ஸ்லீப்பர் இன்னும் வசதியாக இருக்கும்.என்ன கொஞ்சம் பயணசீட்டின் விலை கொஞ்சம் அதிகம் (மாவுக்கேத்த பணியாரம் ) ஆனால் தலையானி, போர்வை,தொலைக்காட்சி(புதிய படம்),சார்ஜ் போட்டுக்கொள்ளலாம்,நிம்மதியாக உறங்கி நம் இடத்திற்கு சென்றடையலாம். ஆனால் ஓட்டுனர் பக்கத்தில் உட்கார்ந்து நாம் கொஞ்ச நேரம் பயணித்தால் உள்ளே சென்று தூங்கவே மனம் வராது  அவ்வளவு பீதி. இப்பதிவு எதற்கென்றால் ,சில நேரம் நாம் பதிவு செய்த பேருந்து அல்லது மகிழுந்து எதுவானாலும் முக்கால்வாசி சரியான நேரத்திற்கு வந்துவிடும்.சில நேரம் நகரத்தில் வண்டி நகராமல் மணி நேரமாக ஊர்ந்து சென்று உங்கள் இடத்திற்கு வந்தடையும்.லைவ் ட்ராக்கிங் இருந்தால் அதில் பார்த்துக்கொள்ளலாம் இல்லையெனில் 10 முதல் 20 நிமிஷம் வரை காத்திருக்கலாம்.அதற்குள் 50 முறை அழைப்பு விடுத்தால் அவர்கள் நம் அழைப்...

என் 100 நாள் ஓட்ட சவாலின் போது ஓர் நாள் இரவில் ஏற்பட்ட சம்பவங்கள்,சவால்கள்!!!

58/ 100 Days of Running - HDOR |10k❤️🏃🏻‍♂️ இந்த  ஓட்டம் வாழ்வில் மறக்க முடியாதவை!! (27.06.2022) முடிந்த வரை ஞாயிற்றுக்கிழமை காலையில் ஓட்டத்தை முடித்து விடுவேன்.ஏனெனில்,அன்று நெடுதூர ஓட்டம் அதுமட்டுமில்லாமல் காலை முடித்துவிட்டால் அதோடு செவ்வாய்க்கிழமை தான் ஓட்டம்,திங்கள்கிழமை ஓட்டம் இருக்காது ரெஸ்ட் டே.😍 உறவினர் வீட்டிற்கு வந்தேன்.காலை ஓடலாம் என திட்டம் வைத்திருந்தேன் ஆனால் அங்கே காலை ஏலகிரி மலைக்கு செல்லலாம் என சொல்ல.காலை பைக்கிள் சென்றோம், அங்கு @funderapark  வெவேறு நாட்டு பறவைகள், முயல்கள் அதுஇதுவேன்று பார்த்து முடித்துவிட்டு. பின்பு அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப,சென்று சேர மணி 8.30 ஆகி விட்டது சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஓடலாம் என உள்ளுக்குள் தோன்றினாலும் , கொஞ்சம் படுத்துவிட்டால் அசதியில் உறங்கிவிடுவோம் என பிரெஷ் ஆகி ட்ரெட்மில்லை ஆன் செய்து ஓடத்துவங்கினால் அது சரியாக வேலை செய்யவில்லை. ஷப்பா🤧 ஏற்கனவே நாள் முழுக்க பயணம் 300k வண்டி ஓட்டி உடல் அசதி.சரினு வெளியே கிளம்பினேன் அங்கே எனக்கு அவ்வளவாக வழி தெரியாது கேட்டு கேட்ட...

வாழ்வின் மிகப்பெரும் வலு நெருக்கமாமவரும் இழப்பு,அதுவும் தான் பெற்ற பிள்ளைகளில் மரணம்? இதை கடக்க என்ன செய்யலாம்?

வாழ்வில் மிகப்பெரிய வலி என்றால் அது மரணம் மட்டுமே. நம் வாழ்வில் ஏராளமான  மரணத்தை கண்டிருப்போம்,ஆனால் அது வெறும் மரணச் செய்தியாகவே வந்து சில மாதங்களில் மறந்துவிடும்.நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று.அது பிரிந்தாலும் சரி இறந்தாலும் சரி. தாய்,தந்தை இழப்பை கூட மகனோ மகளோ தாங்கி அவர்கள் நினைவில் வாழ்ந்து கடந்து விடுகின்றனர்.ஏனெனில் அவர்களுக்கு குடும்பம்,குட்டி என வந்துவிடுவதால் அப்படியே வாழ்க்கை சென்று விடுகிறது. ஆனால் பெற்றோர்கள் தன் குழந்தையின் (என்ன வயதானாலும் குழந்தை தானே) மரணத்தை பார்ப்பது வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.அந்த வலியை அம்மாவும்,அப்பாவும் வாழ்க்கை முழுக்க சுமப்பார்கள்.மிகவும் கொடுமையானது.வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் உணர்வார்கள். தன் மகன்/ள் உடல் முன்பு அவர்கள் கதறும் கடைசி மரண ஒளங்கள் கேட்க  முடியாது.இருக்கின்ற மொத்த வலியும் கண்ணில் கண்ணீராக தெரியும்.இதுவரை நிகழ்ந்த,அவர்கள் குணங்களை ல்,பிடித்த உணவுகளை நண்பர்களை பற்றியெல்லாம் கூறி எழுந்து வாடா செல்லமே என அழுகும் போது ஆத்மா மொத்தமும் கதறும். என் வாழ்வில் தன் மகனை/மகளை இழந்து தினம்...

Club House பரிதாபங்கள் - படிக்க வேண்டிய பதிவு!!!!

Club house எனும் செயலி சமீபத்தில் ட்ரெண்டில் இருப்பது,மற்ற சமூக வலைதளங்கள் போல இதுவும் ஒன்று,என்ன? இதில் வெறும் ஆடியோ வடிவில் மட்டுமே பேச முடியும்,இப்போது மெஸ்ஸேஜ் செய்யும் வசதியும் கொண்டு வந்துள்ளனர். இவைப்பற்றி கேள்விப் பட்டும் தள்ளியே இருந்தேன்,சரி என்ன தான் இருக்குனு உள்ளே சென்றேன். ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை ஆனால் போகப் போக புரிந்தது. பலருக்கு இப்போது இதுவே பொழுது போக்காக இருப்பது தெரிடவந்தது. என் நண்பர்கள் சிலரும் ஒரு ரூமில் இணைந்து பாட்டு கேட்டுக் கொண்டே தன் வேலையை செய்வதினால் மனஅழுத்தம் குறைவது போல் ஒர் உணர்வு என பகிர்கின்றனர். நிறைய தலைப்புகள்,புதிய மனிதர்கள்,நிறைய பொழுபோக்கு ,சிறிதளவு கற்றல் எது வேண்டுமோ அதை தேர்வு செய்வது நம் கையில் உள்ளது. எனக்கு சேமிப்பு,முதலீடு,இலக்கு பற்றி சில கிளப்பில் இணைந்தேன்,பின்பு தெரியாமல் ஏதோ ஒரு ரூமில் இணைந்துவிட்டேன் யாரோ ஒருவர் ஒரு பெண்ணை ஆடை அணிந்தது  பற்றி சொல்லி விட்டு ஓடி விட்டார் போல,அதன் பிறகு ஒரே கத்தல்,கதறல்,கோபம்,அழுகை அந்த இடமே ரத்த பூமியாக இருந்தது.பின்பு தான் தெரிந்தது எல்லா ரூமில் இதே போன்ற ஏதாவது கொளாறு செய்...

ஹெல்மெட் அணிவதில் ஏன் அவ்வளவு சோம்பேறித்தனம்? விபத்து - விழிப்புணர்வு பதிவு

நேற்று அடையாரில் இருந்து வரும்போது வேளச்சேரி மேம்பாலத்தில் ஒரே போக்குவரத்து நெரிசல், ரைட்டு ஏதோ சம்பவம் ஆகி இருக்குன்னு கிட்ட போய்ட்டு பார்த்தா, சம்பவமே தான். முதியவர் வண்டி ஓட்டிகொண்டே பின்னால் பார்க்காமல் indicator போடாமல் ,சமிக்கை எதுவும் காட்டாமல் இடது பக்கம் திரும்பியுள்ளார்,வண்டியில் வேகமாக வந்த வாலிபர் இடித்ததில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர், இளைஞனுக்கு முகம்,கை காலலேலாம் பலத்த அடி அவர்க்கு அவரச ஊர்தியில் முதலுதவி செய்தார்கள்,பின் மருத்துவமனை சென்றார்கள். பெரியவருக்கு கை,கால்,முட்டி,பின் மண்டையில் தோல் பிரிந்து சதை தெரியும் அளவுக்கு அடி, சிறிது நேரம் சுய நினைவே இல்லை பிறகு பேசினார்.ஆனால் விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் நேரம் எடுத்தது.வண்டியில் வந்த 108ல் முதலுதவி செய்தார்கள்.பின் அவர் வீட்டிற்கு அழைத்து ஆள் வந்தவுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பினோம்.போகும்போது ஐயா ஒன்னும் இல்ல,சரி ஆகிடும் சொன்னேன்.ஆறுதலான வார்த்தை தான் அப்போது தேவை. அவ்வளவு பேர் நின்று உதவி செய்து வழி அனுப்பியது மனிதம் உயிரோடு இருப்பதை உணர்த்தியது.ஒரு சகோதரியும் கடைசி வரை...

மேதகு - ஒரு சிறிய விமர்சனம்

தமிழனத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இளமைப் பருவ வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நெருக்கடிகள்,அரசியல் அழுத்தத்தைக் கடந்து மாபெரும் வரலாறு வெளிவந்துள்ளது. இதுவரை தலைவர் பிரபாகரனைப் பற்றி தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் நாம் தலைவரை நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். ஏன் இலங்கை பிரிந்தது,ஏன் நம்மை ஆள துடித்தார்கள்,அடித்து நொறுக்கினார்கள் என்பதை தலைவர் "நாம் ஏன் திருப்பி அடிக்கயில்ல" எனும் கேள்வியில் அனைத்திற்கும் பதில் அடங்கியுள்ளது. அடங்கி ஓடியுங்கியது போதும் இனியும் எம்மக்கள் அடிமையாக இருக்க வேண்டாம் தமிழனை அடித்தால் திருப்பி அடி விழும்னு பயம் வரணும்னு தலைவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு கம்பீரம். தமிழ் ஈழ சொந்தங்களின் விடுதலை போராட்டத்தை கொச்சைப் படுத்தி எடுக்கும் பிறமொழியாளர்கள் இருக்கும் இடத்தில் தற்போது இயக்குனர் கிட்டு அவர்கள் சமரசமில்லாத வரலாற்றை கொடுத்திருக்கிறார். உலகில் உள்ள அனைவரும் காண வேண்டிய படம் முக்கியமான எம் மக்களை கொச்சைப் படுத்தும் பிற மொழியாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எம் வரலாற்றை. குறைவான பண செலவு திர...

பெற்றோர்களே சேமிப்பு ஏதேனும் வைத்துள்ளீர்களா? பென்ஷன் திட்டம் பற்றி யோசித்தீர்களா?

சேமிப்பு,முதலீடு என்பது சிறுவயது முதல் பெற்றோர்களை பார்த்து நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். முன்பெல்லாம் ஒன்று வாங்க வேண்டும் என்று யோசித்தால் கூட ஆயிரம் கேள்விகள் கேட்டு ஆமாம்ல இது இப்போ தேவையில்லைனு அந்த பணத்தை வேறு விழியத்திற்கோ சேமிப்பிற்கோ ஒதுக்கி விடுவார்கள். உண்டியல் பழக்கமும், அரிசியிலும்,அஞ்சறை பெட்டியிலும் பணம் ஒளிந்து கொண்டு தேவைக்கு வெளியே வந்தது இப்போது அந்த பழக்கமும் மறைந்து வருகிறது. பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளரும் கற்றுக்கொள்ளும், நாம் தான் கற்பிக்கவும் வேண்டும். நூற்றில் முக்கால்வாசி பெற்றோர்கள் இன்னைக்கு என் குழந்தைக்கு தேவையானதை நிறைவேற்றி விட்டேன் என ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள்.ஆனால் எந்த சேமிப்பும்,முதலீடும் செய்வதில்லை மிஞ்சி மிஞ்சி போனால் தங்கத்தை வாங்கி பீரோவிலும்,இடத்தை வாங்கி போடுவதை முதலீடாக கருதுகின்றனர்.இன்னும் பலர் அதை கூட செய்வதில்லை. கடனை மட்டுமே வாங்கி குடும்பத்தை நடத்தி இறுதியில் அந்த கடனை தன் பிள்ளைகளின்  தலையில் கட்டுவதே இப்போது அதிகம் நடக்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஆசையாக செலவு செய்ய முடியாது ,சேமிக்க முடியாது, க...

இளைஞர்களே இப்போதே சேமிப்பை துவங்குங்கள் இல்லையெனில் வாழ்க்கை முழுக்க பணத்திற்காக போராட வேண்டி வரும்? செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?

உயிர் வாழ மூச்சுக் காத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பணம் . இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதிலும் செலவு செய்வதிலும்  காட்டுகின்ற ஆர்வத்தை சேமிப்பில் துளியும் காட்டுவதில்லை. பலரிடம் சேமிப்பை பற்றி பேசினாலோ கேட்டாலோ " அட போயா சம்பாதிக்கிறது எதுக்கு செலவு பண்ண தானே, எடுத்துட்டு போகும்போது ஒரு ரூபா கூட கொண்டு போக போறது இல்ல,இருக்கிறத வச்சிக்கிட்டு ஜாலியா வாழ்ந்துடனும்"னு கம்பி கட்டுகிற கதையெல்லாம் விடுவாங்க. இன்றைய மகிழ்வு எவ்வளவு முக்கியமோ அதை விட எதிர்காலத்தின் மகிழ்ச்சி நிறைந்த நிம்மதி அதை விட முக்கியம். சேமிப்பும் முதலீடும் செய்தால் மட்டுமே பிற்காலத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும், எந்த ஒரு அவசர ஆபத்திற்கு கூட நம் பணம் தான் உதவும்,இப்போது தெரியாது அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அய்யொ பணம் கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தால் யூஸ் ஆகி இருக்கும்னு தோணும்". யாருக்கு எப்போ என்ன ஆகும்,திடீர்னு என்ன செலவு வரும்,எப்போ பொருளாதாரம் சரியும், வேலை போகும்னு தெரியாது". அதனால் இப்போதைக்கு "அவசரகால நிதி ( Emergency Fund) குறைந்தபட்சம் 3 மாதம் அதிகபட்சம் 6 ம...

மனக்கசப்பில் பிரிவதற்கும் ஒருவரை இழப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு!!எவ்வளவு வலி நிறைந்தது?

மனக்கசப்பு ஏற்பட்டு கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள் பிரிந்து வாழ்வது வேறு. இத்தனை காலம் அன்யோன்யமாய் வாழ்ந்து அவரை இழப்பது வேறு. மறுபடி வாழ்வில் எத்தனை பேர் அதே போன்ற அன்பையும் காதலையும் கொடுத்தாலும் அந்த இடம் நிறம்பாது வெற்றிடமாகவே இருக்கும். அவர் இனி வரவே மாட்டார்,இனி அவரை பார்க்கவே முடியாது,பேசவும் முடியாது என்பது நினைவுக்கு வரும் போதெல்லாம் இதயத்தில் இருந்து ரத்தம் கசிவது போல் உணர்வு ஏற்படும்,வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே நொந்துக் கொண்டே இருப்பார்கள். வேறு வழி இல்லை தனக்காக இல்லலையெனினும் தன்னை நம்பி வாழ்பவர்களுக்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும்,சென்றவர்கள் நினைவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் அவரோடு மகிழ்வாக இருந்த நினைவுகளை அசை போடுங்கள்,வேறு வழியில்லை வாழ்ந்து தான் ஆக வேண்டும். சுற்றி இருப்பவர்கள் முடிந்தவரை அந்த இழப்பின் நினைவுகளை நியபகப்படுத்தாமல் அவரை மனம் நோகாமல் பார்த்துக்க கொள்ளுங்கள் ஏற்கனவே நொந்து வெந்து இருக்கிறார்...! ஊர் உலகம் என்ன பேசினாலும் உங்கள் அன்பு புனிதமானது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் அப்படி இருந்தால் தான் நிம்...